கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் காதலனுடன் பாழடைந்த வீட்டில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, 3 வாலிபர்கள் திடீரென்று உள்ளே நுழைந்தார்கள். அப்போது காதலர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூரில் காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கிஷோர் (19), சதிஷ் (19), ஆரிப் (18) ஆகிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமை
தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் விருதுநகர், வேலூர், சென்னை இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவம் அடங்குவதற்குள் கடலூரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் காதலனுடன் பாழடைந்த வீட்டில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, 3 வாலிபர்கள் திடீரென்று உள்ளே நுழைந்தார்கள். அப்போது காதலர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, காதலர்கள் இருவரையும் உன்றாக சேர்த்து வைத்து செல்போனில் வீடியோ எடுத்து வெளியில் காண்பித்து விடுவதாக மிரட்டி வந்துள்ளனர்.

காதலன் கதறல்
இதனையடுத்து, காதலனை கடுமையாக தாக்கி கட்டிப்போட்டுவிட்டனர். பின்னர், எவ்வளவு கதறி கெஞ்சியும் கேட்காமல் வலுக்கட்டாயமாக காதலன் முன்பு பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன் பின்னர் மீதமுள்ள 2 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து, இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.

கைது
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த கிஷோர் (19), சதிஷ் (19), ஆரிப் (18) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த 3 நபர்களின் செல்போன்களை கைப்பற்றிய போலீசார் ஏதேனும் பலாத்கார வீடியோ அல்லது புகைப்படம் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். கடலூரில் சினிமா பாணியில் காதலன் கண்முன் காதலியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
