Asianet News TamilAsianet News Tamil

3 மாத கைக் குழந்தை இருப்பதை மறைத்து திருமணம் செய்த இளம் பெண்.. முதலிரவில் கண்டுபிடித்த புது கணவன்.

முதலிரவில் மனைவியில் அடிவயிற்றில் ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்ததற்கான அடையாளத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த மணமகன் மனைவிக்கு ஏற்கனவே குழந்தை  பிறந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 

Young woman who got married hiding the fact that she has a 3 month old baby .. New husband found on the first night.
Author
Chennai, First Published Jun 10, 2022, 7:47 PM IST

முதலிரவில் மனைவியில் அடிவயிற்றில் ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்ததற்கான அடையாளத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த மணமகன் மனைவிக்கு ஏற்கனவே குழந்தை  பிறந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

ஆயிரம்  பொய்களைச் சொல்லியாவது திருமணத்தை நடத்து என்பது  பழமொழி, ஆனால் அப்படி பொய் சொல்லி நடத்தப்பட்ட திருமணம் இப்போது காவல் நிலையம் வாசல் வரை வந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி  மாவட்டத்திலுள்ள பதர்வாஸ் பகுதியைச் சேர்ந்த இளைஞன், அசோக் நகரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இரு குடும்பத்தாரின் ஏற்பாட்டில் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு முன்பாகவே வருங்கால மனைவியுடன் அந்த இளைஞர் தொலைபேசியில் உரையாடி மகிழ்ச்சியாக இருந்து வந்தார். வருங்கால மனைவியுடன்  வாழ்க்கைப் பயணத்தை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என்ற கனவில் அந்த இளைஞர் மிதந்திருந்தார். அப்படி திட்டமிட்டபடியே இருவருக்கும் திருமணம் நடந்தது.

Young woman who got married hiding the fact that she has a 3 month old baby .. New husband found on the first night.

பின்னர் இருவருக்கும் முதல் இரவு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலிரவின் போது  மணமகனுக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. மணமகளின் அடிவயிற்றில் ஆபரேஷன் செய்யப்பட்டு தையல் போடப்பட்டு இருந்தது, இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணமகன் ஏற்கனவே அந்த பெண்ணுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு குழந்தை பிறந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அது குறித்து மனைவியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில் உடனே அந்தப் பெண்ணை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார், ஆனால் மீண்டும் சென்று மனைவியை வீட்டிற்கு அழைத்து வரவில்லை, அவர் உடனே தான் ஏமாற்றப்பட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே நேரத்தில் அந்தப் பெண்ணும் தனது கணவன் தன்னை துன்புறுத்துவதாக புகார் கொடுத்தார். மேலும் நீதிமன்றத்தில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் தன்னை மோசடி செய்ததாக அந்த இளைஞர் வழக்கு தொடுத்தார்.

பின்னர் ஆர்டிஐ உதவியுடன் அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்கனவே அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதும் தெரியவந்தது  அதேபோல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்தது. பின்னர் அதற்கான  ஆதாரங்களை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

Young woman who got married hiding the fact that she has a 3 month old baby .. New husband found on the first night.

இந்நிலையில் கோர்ட்டு தொடர்பான விசாரணைக்கு செல்லும்போதெல்லாம் மனைவியின் குடும்பத்தார் தன்னை தாக்குவதால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது, எனவே தனது வழக்கை அசோக் நகரில் இருந்து ஷிவ்பூருக்கு மாற்ற வேண்டும் என அவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 3 மாத குழந்தை இருப்பதை மறைத்து பெண் இளைஞரை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியுள்ளார் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios