Asianet News TamilAsianet News Tamil

திருமணம் ஆகி 5 நாள் கூட ஆகல.. அதுக்குள்ள இப்படியா ? கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி

திருமணம் ஆன 5 நாட்களில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

young woman was murdered within 5 days of her marriage
Author
First Published Sep 7, 2022, 5:32 PM IST

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள துப்பாக்குடி என்ற ஊர் அமைந்துள்ளது. அங்கு ஊருக்கு வெளியே ஓடையில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்களில் சிலர், ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். 

இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அந்த இளம் பெண் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.விசாரணையில் அந்த அப்பெண் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது மகள் இசக்கி செல்வி என்பது தெரியவந்தது. 

மேலும் செய்திகளுக்கு..உனக்கு 23 எனக்கு 35.. அண்ணியுடன் கள்ளக்காதல் - மதுரை ஜோடிக்கு ஏற்பட்ட விபரீதம்

young woman was murdered within 5 days of her marriage

இசக்கி செல்விக்கு கடந்த 1 ஆம் தேதி துப்பாக்குடி பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் அவருக்கு திருமணம் நடைபெறுவதாக திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், அதிகாலை இசக்கி செல்வி திடீரென மாயமாகி விட்டார். உடனே அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு இளைஞரை அவர் திருமணம் செய்து கொண்டார். இதற்கு 2 வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இசக்கி செல்வி தனது கணவருடன் கடையம் அருகே கோவிலூத்து பகுதியில் உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்ட இசக்கி செல்வி வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், தான் அவர் மறுநாள் ஓடையில் கொலைசெய்யப்பட்ட பிணமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் நேற்றுமாலை இசக்கி செல்வியை ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதும் தெரியவந்து உள்ளது. அவர் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ஒன்றிணைவோம் வா.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.! எடப்பாடியா? பன்னீரா? குழப்பத்தில் ர.ரக்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios