காட்டுக்குள் தூக்கிப்போய் இளம்பெண் பலாத்காரம்... மரம் வெட்டும் பெண்ணிற்கு புதருக்குள் நடந்த பகீர் சம்பவம்..!
செங்கல்பட்டு அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த காவித்தண்டலம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயவேல்-கோமதி தம்பதி. இவர்கள் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வேலைக்கு சென்ற கோமதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த கணவர் மனைவியை பல இடங்களில் தேடியுள்ளார்.
இந்நிலையில், அங்குள்ள ஏரிக்கரை கால்வாய் புதர் ஒன்றில் நிர்வாணமாக பெண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ஜெயவேலு சென்று பார்த்தபோது அவரது மனைவி கோமதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் காவல்துறையினர் தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.