Asianet News TamilAsianet News Tamil

உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்.. திமுக நிர்வாகி உள்பட 8 கைது.!

உல்லாசமாக இருந்ததை ஹரிகரன் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். சிறிது நாட்களில் அந்த வீடியோ குறித்த விவரம் தெரியவந்தது.
அதனை அழிக்காமல் நான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும். இல்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். அப்போது தான் ஹரிகரன் என்னை உண்மையாக காதலிக்கவில்லை என்ற விஷயம் தெரியவந்தது.

young woman gang rape... 8 people Arrest
Author
Virudhunagar, First Published Mar 22, 2022, 8:14 AM IST

ஆசைவார்த்தை கூறி  காதலியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆசைவார்த்தை கூறி உல்லாசம்

விருதுநகரை சேர்ந்த 22 வயது பெண்ணுடன் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (27) பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், பெத்தனாட்சி நகரில் இருக்கும் தன் மருந்து குடோனுக்கு வருமாறு காதலன் அழைத்ததையடுத்து அங்கு சென்றுள்ளார். அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பி அந்த பெண் ஆசைக்கு இணங்கி உல்லாசமாக இருந்துள்ளனர்.

young woman gang rape... 8 people Arrest

வீடியோ எடுத்து மிரட்டல்

ஆனால், இருவரும் உல்லாசமாக இருந்ததை ஹரிகரன் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். சிறிது நாட்களில் அந்த வீடியோ குறித்த விவரம் தெரியவந்தது. அதனை அழிக்காமல் நான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும். இல்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். அப்போது தான் ஹரிகரன் என்னை உண்மையாக காதலிக்கவில்லை என்ற விஷயம் தெரியவந்தது.

young woman gang rape... 8 people Arrest

கூட்டு பாலியல் பலாத்காரம்

ஹரிகரனின் மிரட்டலால் அவர் அழைத்தபோதெல்லாம் சென்றுள்ளார். இந்நிலையில், அந்த வீடியோவை அவரது நண்பர்களான மாரி, மாடசாமி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜீனத் அகமது ஆகியோருக்கு அனுப்பி உள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர்களும் அந்த வீடியோவை வைத்து அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர். இந்த வீடியோவை வைத்து மிரட்டி மாடசாமி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

young woman gang rape... 8 people Arrest

போலீஸ் கைது

இதனையடுத்து, வீடியோவை வைத்துக்கொண்டு மாரி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜீனத் அகமது ஆகியோரும் பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களது மிரட்டல் தொடர்ந்து அதிகரித்து வந்ததைதயடுத்து வேறு வழியில்லாமல் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார்  8 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில், ஜீனத் அகமது திமுக இளைஞரணி அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.  தனது காதலியை காதலன் நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios