Asianet News TamilAsianet News Tamil

பேஸ் புக் காதலியை நண்பனுடன் சேர்ந்து கற்பழித்த காதலன்!! காரில் கடத்திச் சென்று கூட்டாக நாசம்

பேஸ் புக் காதலியை காரில் கடத்தி சென்று, கற்பழித்த காதலனின் நண்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

young man raped his facebook girlfriend
Author
Chennai, First Published May 29, 2019, 4:59 PM IST

பேஸ் புக் காதலியை காரில் கடத்தி சென்று, கற்பழித்த காதலனின் நண்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

அஞ்சுகிராமம் அருகே ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் ஏசு நேசன், மாற்றுத்திறனாளி. இவருக்கும் 17 வயதுடைய ஒரு கல்லூரி மாணவிக்கும் ஃ  பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் தொடர்ந்து  செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று ஏசு நேசன், தனது நண்பர் ஆதிசுடன் ஒரு காரில் மாணவியை சந்திக்க சென்றார். காரில் ஏசு நேசனுடன் மற்றொருவர் இருப்பதை கண்ட மாணவி காரில் ஏற தயங்கினார். ஆனால், இருவரும் சேர்ந்து மாணவியை பலவந்தமாக காரில் ஏற்றி கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கற்பழித்துள்ளனர்.

பின்னர், இருவரும் அந்த மாணவியை அழைத்து சென்று வடசேரியில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பற்றி மாணவி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏசுநேசன் மற்றும் அவரது நண்பன் ஆதிஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

விசாரணையில், கைதான ஆதிஷ் மீது நாகர்கோவில் போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதனால், ஆதிசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், ஆதிசை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங் கோட்டை ஜெயிலில் அடைத்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios