Asianet News TamilAsianet News Tamil

திருச்சியில் இளைஞர் வெட்டி படுகொலை; சொத்துக்காக கள்ளக்காதலனுடன் தந்தையின் மூன்றாவது மனைவி வெறிச்செயல்

திருச்சி அருகே சொத்து பிரச்சினையில் வாலிபரை படுகொலை செய்த சித்தி, அவரது கள்ளக்காதலன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

young man killed by stepmother in trichy for asset issue vel
Author
First Published Dec 22, 2023, 1:11 PM IST

திருச்சி மாவட்டம், காணக்கியநல்லூர் அருகே உள்ள தச்சன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன். இவருக்கு மூன்று மனைவிகள் இருந்த நிலையில் இரண்டு மனைவிகள் இறந்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து கௌதமன், முதல் மனைவியின் மகன் யுவராஜ் (வயது 22), இரண்டாவது மனைவியின் மகள் மற்றும் மூன்றாவது மனைவியின் 3 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த 5ம் தேதி கௌதமன் உடல்நலக்குறைவால் உயிரிழக்கவே கௌதமன் பெயரில் திருச்சி பகுதிகளில் உள்ள 5 வீடுகளில் பங்கு கேட்டு மூன்றாவது மனைவி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த யுவராஜ் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து காணக்கியநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நீலகிரி வனப்பகுதியில் மானை துடிதுடிக்க வேட்டையாடிய புலி; வீடியோ வெளியாகி பரபரப்பு

விசாரணையில் கௌதமன் இறந்ததும் எங்கே சொத்தில் பங்கு கிடைக்காதோ என நினைத்த பூமதி தனது அண்ணன் சின்னையனை ஏவி விட்டு சொத்தை பிரித்து தரும்படி யுவராஜிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். சில நாட்கள் சென்றதும் முறையாக பாகப்பிரிவினை செய்துகொள்ளலாம் என யுவராஜ் கூறவே அதனை ஏற்றுக்கொள்ள முடியாத பூமதி யுவராஜை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனைத்தொடர்ந்து பூமதி தனது கள்ளக்காதலனான அதே பகுதியைச் சேர்ந்த குட்டீஸ் என்கிற பாலசுப்பிரமணி, அவரது நண்பர்கள் அலெக்சாண்டர், ஸ்டீபன் ஆரோக்கியராஜ், சின்னையன் அவரது மகன் வல்லரசு ஆகிய 6 பேர் யுவராஜை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி வீட்டில் தனியாக இருந்த யுவராஜை வெட்டி கொலை செய்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சின்னையன், பூமதி, அவரது கள்ளக்காதலன் பாலசுப்பிரமணி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios