Asianet News TamilAsianet News Tamil

மோடிக்கு ஓட்டுக் கேட்ட தாத்தாவை அடித்தே கொன்ற கொடூரம்... தஞ்சையில் நடந்த கோர சம்பவம்!

மோடிக்கு ஓட்டுப் போடுங்க என்று  வாக்கு சேகரித்த ஒரு முதியவர்  அடித்தே கொன்ற சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.
 

Young man attacked and Killed Old man for Modi
Author
Tanjavur, First Published Apr 15, 2019, 10:26 AM IST

மோடிக்கு ஓட்டுப் போடுங்க என்று  வாக்கு சேகரித்த ஒரு முதியவர்  அடித்தே கொன்ற சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் புலவர் கோவிந்தராஜன் வயது 75 முதியவரான இவர் ஒரு சமூக ஆர்வலர். இவர் ஒரத்தநாடு கால்நடை பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இவர் எந்தக் கட்சியும் சாராதவர் என்று சொன்னாலும் அதிமுகவின் விசுவாசி. கடந்த சில தினங்களாக  மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று தன்னந்தனியாக கழுத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, மோடி போட்டோக்களை மாட்டிக் கொண்டு ஓட்டுக்கு கேட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை ஒரத்தநாடு அண்ணாசிலை அருகே வழக்கம் போல வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த இடத்தில் இருந்த கண்ணந்தங்குடி மேலையூர்  கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் கோபிநாத் வாக்குவாதம் நடந்தது சில நிமிடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மோடிக்கு வாக்கு சேகரிக்க கூடாது என்று டிரைவர் கோபிநாத் சொல்ல அதன் பிறகும் மோடிக்கு ஓட்டுப் போடுங்க என்று தனிநபர் பிரச்சாரத்தை தொடங்கிய போது முதியவரான  கோவிந்தராஜ் கொடூரமாக தாக்கப்பட்டார். அப்பகுதியில் நின்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கோவிந்தராஜ் இறந்திருந்தார்.

இந்த தகவல் அறிந்து வந்த அவரது மகள் அற்புதா ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவம் குறித்து விசாரனை செய்த  போலிசார் டிரைவர் கோபிநாத்தை கைது செய்தனர். மோடிக்கு ஓட்டுக் கேட்டதால் முதியவர் அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios