தாய், மகள், பக்கத்துவீட்டு பெண் என திரைப்படம் பாணியில் ஆசைப்படும் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த காமுகன் தற்போது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் இருளபுரத்தை சேர்ந்த விஸ்வா என்பவர் கடந்த 2022ல் கிருஷ்ணகிரியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே கடையில் பணியாற்றி வந்த 21 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரை விட்டு விலகி கிருஷ்ணகிரியில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் விஷ்வா பணியாற்றியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்பொழுது அந்த பகுதியில் கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த இளம் பெண்ணுடன் விஷ்வாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் கடந்த சில வருடங்களாக திருமணத்தை தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளனர். இதன்பிறகு இருவரும் அந்த இரண்டு குழந்தைகளுடன் சேலம் வந்துள்ளனர். சேலம் அம்மாபேட்டை பகுதியில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். 

காதலனுடன் பேசிக்கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் பயங்கரம்

சேலத்தில் அவரது வீட்டின் அருகே உள்ள 40 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் விஸ்வாவிற்கு பழக்கம் ஏற்பட்டு அவருடன் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது விவகாரம் மனைவிக்கு தெரிய வரவே அவரும் ஏற்றுக்கொண்டு அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் அவரது 16 வயது சிறுமியிடமும் ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் அடிக்கடி உல்லாசத்தில் இருந்து வந்துள்ளார்.

தமிழக அரசின் கடன் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது அனைத்தும் உண்மை தான் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

இதில் அந்த சிறுமி கார்பமானதும் தாயாருக்கு தெரிய வரவே உடனடியாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து காவல்துறையினர் விஷ்வாவை போக்சோ வழக்கில் கைது செய்து விஷ்வாவுக்கு இவர்கள் நாலு பேர் தவிர வேறு பெண்களுடன் தொடர்பு உள்ளதா யாரை எனும் ஏமாற்றி உள்ளார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.