Asianet News TamilAsianet News Tamil

காதல் கணவருடன் அடிக்கடி தகராறு... மனைவி எடுத்த விபரீத முடிவு... அதிர்ச்சியில் கணவர்!!

பூந்தமல்லி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

women committs suicide due to frequent fights with her husband
Author
First Published Sep 23, 2022, 12:00 AM IST

பூந்தமல்லி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அடுத்த அகரமேல், எம்.ஜி.எம் நகரை சேர்ந்தவர் கருணாகரன் 33 வயதான இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு 28 வயதான சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு வயதில் கிஷாந்த் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கைது... காரணம் இதுதான்!!

women committs suicide due to frequent fights with her husband

அந்த வகையில் சம்பவத்தன்று வழக்கம் போல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கருணாகரன் சத்யாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் படுக்கை அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்ட சத்யா, நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது சத்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு கருணாகரன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சத்யா இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: கை துடியலூரில், தலை திருப்பூரில்... அதிர வைத்த பகீர் கொலையின் பின்னணி என்ன?

women committs suicide due to frequent fights with her husband

இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அங்கு சென்ற போலீசார் உயிரிழந்த சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுக்குறித்து கருணாகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Follow Us:
Download App:
  • android
  • ios