Asianet News TamilAsianet News Tamil

காதலனுடன் காப்பு காட்டுக்குள் ஜாலியாக இருந்த பெண்... உள்ளே புகுந்த 6 பேர் மாறி மாறி கற்பழித்த சோகம்...

தனது காதலனுடன் உல்லாசமாக இருக்க காப்பு காட்டுக்குள் போன கல்யாணமான பெண்ணை, காதலனை அடித்து துரத்திவிட்டு மாறி மாறி நாசம் செய்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

woman raped by 6 people at salem vazhappadi
Author
Salem, First Published Sep 18, 2019, 1:36 PM IST

தனது காதலனுடன் உல்லாசமாக இருக்க காப்பு காட்டுக்குள் போன கல்யாணமான பெண்ணை, காதலனை அடித்து துரத்திவிட்டு மாறி மாறி நாசம் செய்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சின்னமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தினேஷ் (25 வயது) ஒரு தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் டிரைவராக உள்ளார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும், கல்யாணம் ஆன பிரேமா 32 வயது பெண்ணுடன் தினேஷூக்கு உறவு ஏற்பட்டுள்ளது காலப்போக்கில் இருவரும் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

இருவரும் பேரும் லீவு நாட்களிலும், வேலைக்கு லீவுபோட்டுவிட்டும் பல இடங்களுக்கு சுற்றி திரிந்து ஜாலியாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினமும் பைக்கில் நெய்யமலை காப்புக் காட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு ரோட்டோரம் பைக்கை நிறுத்திவிட்டு, இருவருமே ஆளில்லாத அந்த அடர்ந்த காட்டில் தனிமையில் ஜாலியாக இருந்துள்ளனர். ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பைக்கை பார்த்த அந்த  6 பேர் கொண்ட கும்பல், காட்டுக்குள் சென்றது, அடிவாரத்துக்கு வந்தது.   அப்போதுதான் காதல் ஜோடி காட்டுக்குள் இருந்து சிரித்து பேசிக்கொண்டே வெளியே வந்துள்ளது. அப்போது அந்த பெண்ணை பார்த்ததும், தினேஷை மிரட்டி சரமாரியாக அடித்த அந்த கும்பல்.

மயங்கிய காதலன் தினேஷை விட்டுவிட்டு, தப்பிக்க முயன்ற அந்த பெண்ணை அதே காப்புக் காட்டுக்குள் தூக்கி சென்றது அந்த கும்பல், என்னை விட்டுவிடுங்கள்.. என்று அந்த பெண் கதறி கெஞ்சியதை கேட்காத அந்த கும்பல், மாறி மாறி நாசம் செய்துள்ளது. 

இதையடுத்து, படுகாயங்களுடன் ரோட்டிற்கு ஓடிய தினேஷ், அந்த பகுதியில் நடமாடி கொண்டிருந்தவர்களிடம் நடந்ததை சொல்லி அவர்கள் விரைந்து வருவதற்குள் அந்த கும்பல் தப்பிவிட்டது. 

இதுகுறித்து அந்த பெண் ஏத்தாப்பூர் ஸ்டேஷனில் புகார் கொடுக்க, அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணையும் நடத்தப்பட்டது. அப்போது தலைமறைவாக இருந்த 6 பேர் கொண்ட கும்பலை அதிரடியாக கைது செய்தனர். காப்புக் காட்டுக்குள் சென்ற பெண்ணை 6 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios