Asianet News TamilAsianet News Tamil

நாள் தோறும் அடி, உதை…. பொறுக்க முடியாமல் கள்ளக் காதலனை போட்டுத் தள்ளிய இளம் பெண் !!

மதுரை அருகே தினம்தோறும் குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்த கள்ளக் காதலனை இளம்பெண் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

woman killed her illegal lover
Author
madurai, First Published Jul 19, 2019, 9:46 PM IST

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பணன். இவரது மகன் வெயில்முத்து . சுமை தூக்கும் தொழிலாளி. அதே பகுதியில் வசித்து வருபவர் காளீஸ்வரி இவரது கணவர் கடந்த 2014-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு 10  மற்றும் 12 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெயில்முத்துவுக்கும், காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. வெயில்முத்து தனது வீட்டிற்கு செல்லாமல் காளீஸ்வரி வீட்டிலேயே தங்கினார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்தனர்.

woman killed her illegal lover

இந்த நிலையில் வெயில்முத்து மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி காளீஸ்வரியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அடித்து துன்புறுத்திய தாகவும் தெரிகிறது.
கடந்த 17-ந் தேதி மது போதையில் வந்த வெயில்முத்து, காளீஸ்வரியை தாக்கினார். அப்போது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போதையில் தவறி விழுந்த வெயில்முத்துவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது.

woman killed her illegal lover

அதிர்ச்சியடைந்த காளீஸ்வரி செய்வதறியாது திகைத்தார். நள்ளிரவு முழுவதும் பிணத்துடன் இருந்த அவர், கொலையை மறைக்க வெயில்முத்து உடல் மீது மண்எண்ணை ஊற்றி எரித்தார். சரியாக உடல் எரியவில்லை.

இதையடுத்து அதிகாலையில் வீட்டின் முன்புறம் உள்ள குப்பை போடும் இடத்தில் குழியை தோண்டி வெயில்முத்து உடலை புதைத்தார்.

இதனிடையே  இன்று காலை அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம், பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து காளீஸ்வரி டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

woman killed her illegal lover

இதற்கிடையே வெயில் முத்து உடலை வாங்க மறுத்து அவரது தந்தை கருப்பணன் மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் போராட்டம் செய்தனர். அப்போது காளீஸ்வரி மட்டும் இந்த கொலையை செய்திருக்க முடியாது. இதற்கு உடந்தையாக சிலர் உள்ளனர் என சந்தேகம் தெரிவித்தனர்.  இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios