Asianet News TamilAsianet News Tamil

உறவுகொள்ள மறுப்பு... மனைவியை கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவன்..! அதிரவைக்கும் வாக்குமூலம்..!

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மாமியாரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

wife murder... husband arrest
Author
Tamil Nadu, First Published Apr 21, 2019, 4:25 PM IST

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மாமியாரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள கோம்பை அமுல்நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மணிகண்டன் (வயது 44). அவரது மனைவி பழனியம்மாள் (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மனைவி பழனியம்மாளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மணிகண்டன் வீட்டைவிட்டு வெளியேறினான். இரவு மனைவி மற்றும் மாமியார் முத்தம்மாள் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மணிகண்டன் இருவரையும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தான். wife murder... husband arrest

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார் கொலை செய்யப்பட்ட பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளின் உடல்களை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ரோந்து பணியிலிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் மணிகண்டனை கோம்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். wife murder... husband arrest

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நான் எனது மனைவியை உறவுக்கு அழைக்கும் போதெல்லாம் மறுத்து வந்தார். இதனால் அவருடன் நான் அடிக்கடி தகராறு செய்தேன். அப்போது என் மனைவியும், மாமியாரும் சேர்ந்து என்னை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவார்கள். என் மனைவி வேலை செய்யும் தோட்டத்தில் அவரை பார்க்க சென்ற போது அவர் அங்குள்ள வேறு ஒருவரிடம் சிரித்து பேசிக் பழகிக் கொண்டு இருந்தார். இதனால் வீட்டுக்கு வந்த என் மனைவியிடம் என்னுடன் இருக்க உனக்கு பிடிக்கவில்லையா? தோட்டத்தில் வேலை பார்க்கும் வேறு ஒருவருடன் சிரித்து பேசுகிறாய்? அவனுடன் உனக்கு தொடர்பு உள்ளதா? என சத்தம் போட்டேன். wife murder... husband arrest

நேற்று இரவும் இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு வந்தது. பின்னர் என் மனைவி தூங்கச் சென்று விட்டார். ஆனால் ஆத்திரம் அடங்காமல் இருந்த நான் என் மனைவியை வெட்டிக் கொன்றேன். சத்தம் கேட்டு அருகில் தூங்கிக் கொண்டு இருந்த என் மாமியார் எழுந்து அதை தடுத்தார். அவரையும் வெட்டி கொன்றேன். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios