குழந்தை இல்லாததால் ஏற்பட்ட சண்டையில், உணவில் விஷம் கலந்து கணவனை மடியில் படுக்கவைத்து ஊட்டிவிட்டு கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டார். மனைவியின் மடியில் படுத்து ஆசையாக உணவு உண்ட கணவன், கவலைக்கிடமான நிலையில் உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை இல்லாததால் ஏற்பட்ட சண்டையில், உணவில் விஷம் கலந்து கணவனை மடியில் படுக்கவைத்து ஊட்டிவிட்டு கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டார். மனைவியின் மடியில் படுத்து ஆசையாக உணவு உண்ட கணவன், கவலைக்கிடமான நிலையில் உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை தாவுக்காட்டைச் சேர்ந்த ராமசாமிக்கும், அத்தியூத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணத்திற்க்கும் 18 ஆண்டுகளுக்கு முன் கல்யாணம் நடந்தது. இருப்பினும் அந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால் அதுதொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகக் சொல்லப்படுகிறது.

அண்மையில் சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்குச் சென்ற பஞ்சவர்ணம் கணவனுடன் வர மறுத்ததாக சொல்லப்படுகிறது. உறவினர்களின் சமரசத்திற்குப் பின் கணவனின் வீட்டிற்குச் செல்ல அவர் சம்மதித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ராமசாமி - பஞ்சவர்ணம் இடையே மீண்டும் சண்டை வரவே, அவர்கள் இருவரையும் ராமசாமியின் தம்பி கணேசன், தன்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ள தனக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் தங்க வைத்துள்ளார். அங்கும் அவர்கள் சண்டை தொடரவே ஆத்திரம் அடைந்த பஞ்சவர்ணம், கணவனைக் கொல்ல பிளான் போட்டதாக சொல்லப்படுகிறது.

கணவன் ராமசாமியை உணவில் விஷம் வைத்துக் கொல்லப் போவதாக பஞ்சவர்ணம் அடிக்கடி கூறி சொல்லி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் பஞ்சவர்ணம், தக்காளி சாதம், முட்டை பொறியல், ரசம் சமைத்து, அதில் எலியைக் கொல்லப் பயன்படுத்தப்படும் விஷத்தை சேர்த்துள்ளார்.

அப்போது பாசமாக தனது கணவன் ராமசாமியை மடியில் படுக்க வைத்து ஊட்டி விட்டுள்ளார். நீ தான் எனக்குப் பிள்ளை என்று மனைவி கொஞ்சிப் பேசியதை நம்பி, நடக்கப் போகும் விபரீதத்தை புரியாமல் சாப்பிட்டுள்ளார் ராமசாமி. உணவை ஊட்டி விட்ட பின்னர் வெளியே வந்த பஞ்சவர்ணம், அருகில் உள்ள கணேசனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு, கணேசனை சந்தித்த அவர், கணவனுக்கு விஷம் கலந்த உணவை ஊட்டி விட்டதைச் சொல்லி, இன்னும் சற்று நேரத்தில் தங்கள் சகோதரர் இறந்து விடுவார் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கணேசன், உடனடியாக தனது அண்ணனை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு ராமசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதனையடுத்து பஞ்சவர்ணத்தை தேவிப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.