Asianet News TamilAsianet News Tamil

கல்யாணம் முடிஞ்ச கையோட கணவன் மண்டை மேல கல்லை போட்டு கொன்ற மனைவி..!

திருமணமாகி 5 மாதமே ஆன நிலையில் தன் கணவரை கல்லாலேயே அடித்துக் கொண்டுள்ளார் மனைவி. இந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் நடந்துள்ளது.
 

wife killed her husband within 5 months after her marriage
Author
Chennai, First Published May 13, 2019, 7:31 PM IST

கல்யாணம் முடிஞ்ச கையோட கணவன் மண்டை மேல கல்லை போட்டு கொன்ற மனைவி..! 

திருமணமாகி 5 மாதமே ஆன நிலையில் தன் கணவரை கல்லாலேயே அடித்துக் கொண்டுள்ளார் மனைவி. இந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் நடந்துள்ளது.

நாகை மாவட்டம்  தலைசங்ககோட்டையை சேர்ந்தவர் சதீஷ் குமார். இவர் அப்பராசபுதூரை சேர்ந்த கலைமதி என்பவரை சில ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளார்.பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

wife killed her husband within 5 months after her marriage

அதன்படி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று முடிந்த சில வாரங்களிலேயே இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சில நாட்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் மிகுந்த கோபத்துக்கு ஆளான கலைமதி அவருடைய கணவர் சதீஷ்குமாரை அருகில் இருந்த கல்லை எடுத்து தாக்கியுள்ளார். பின்னர் கலைமதி உடன் வந்த அவருடைய பெற்றோரான நாகராஜன், மருமகனை கத்தியால் குத்தி உள்ளார். இதில் சதீஷ்குமார் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, விரைந்து வந்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios