மனைவி கட்டிலில் கட்டிப்புரண்டு கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த ஆசிரியர்.. இறுதியில் நடந்த பயங்கரம்.!
ஷோபனாவும் தர்மராஜூம் உல்லாசமாக இருந்த போது அன்பழகன் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால், ஷோபனா தர்மராஜ் சேர்ந்து அன்பழகனை அடித்து கொன்று வீட்டின் பின்புறத்திலேயே புதைத்துவிட்டு தப்பிவிட்டனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியால் கொடூரமாக கொல்லப்பட்ட கணவனின் கடலத்தை இரண்டு மாதங்களுக்கு பிறகு தோண்டியெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த சிவபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன்(46). இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றினார். இவருக்கு மனைவி ஷோபானா(30). ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் வேலைக்கு சென்ற அன்பழகன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஷோபானா சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஒரு மாதத்துக்கு முன் ஷோபனாவும் காணாமல் போய்விட்டார். இதுபற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரிஷியன் தர்மராஜ்(28)வுடன் ஷோபனாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அவருடன் சென்றுவிட்டார் என்று தெரியவந்தது.
இதனையடுத்து, அதே பகுதியில் பதங்கியிருந்த தர்மராஜை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, ஷோபனாவும் தர்மராஜூம் உல்லாசமாக இருந்த போது அன்பழகன் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால், ஷோபனா தர்மராஜ் சேர்ந்து அன்பழகனை அடித்து கொன்று வீட்டின் பின்புறத்திலேயே புதைத்துவிட்டு தப்பிவிட்டனர். இதுபற்றி சுங்குவார்சத்திரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நேற்று தர்மராஜ், ஷோபனா, கொலைக்க உடந்தையாக இருந்த விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். இதனையடுத்து, புதைக்கப்பட்ட அன்பழகனின் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.