சின்ன வயசு அத்தையுடன் திகட்ட திகட்ட உல்லாசம்... வயசான மாமாவை மர்கயா பண்ண மருமகன்!! ஓசி சோறுக்காக நடந்த பயங்கரம்...
இளைஞன் ஒருவன் சின்ன வயசு அத்தையுடனான உல்லாச வாழ்க்கைக்கு , மாமாவை 7000 ரூபாய் கொடுத்து ஆள்வைத்து கொன்ற சம்பவம் அதிரவைத்துள்ளது.
இளைஞன் ஒருவன் தனது சின்ன வயசு அத்தையுடனான உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த, மாமாவை 7000 ரூபாய் கொடுத்து ஆள்வைத்து கொன்ற சம்பவம் அதிரவைத்துள்ளது.
கடந்த 7ஆம் தேதி டெல்லியின் தெற்கு அவென்யூவில் உள்ள செர்வண்ட் குவார்ட்டர்ஸ் பகுதியில் இருந்த ஒரு வீட்டில் 52 வயதான குமார் என்பவர் கொடூரமான முறையில் கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இப்படி கொடூரமாக கொலை செய்தது யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்று டெல்லி போலீசார் திக்கு திசை தெரியாமல் விசாரணையை தொடங்கியது.
கொலை செய்யப்பட்ட குமார்க்கும், அவரது மனைவி அஞ்சுவிற்கும் சுமார் 18 வயது வித்தியாசம் இருக்கும், வயதான குமாருக்கும், இளம் பெண்ணான அஞ்சுவிற்கும் எப்போதுமே சண்டை நடந்துள்ளது. காரணம், குமாரால் சரியான கணவனாக அதாவது மனைவி அஞ்சுவை சந்தோசமாக வைத்திருக்க முடிவதில்லை, இதனால் இளமை தூண்டலின் காரணமாக தனக்கான செக்ஸ் துணைக்காக ஏங்கி தவித்துள்ளார் அஞ்சு. அஞ்சுவின் செக்ஸ் ஆசையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அஞ்சுவின் தூரத்து உறவினரான சிவா. அஞ்சுவிடம் அன்பாக பழகி, ஒருகட்டத்தில் நெருக்கமாகி தினமும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். கணவன் குமாரிடம் தான் அனுபவிக்காததை சிவாவிடம் கிடைத்துள்ளது.
அஞ்சுவின் இந்த செக்ஸ் ஆசைக்கு காரணம் தனது கணவர் குமாருக்கு 52 வயதாகிறது மட்டுமல்ல, சூதாட்டமே வாழ்க்கையாகி போனது. அழகான மனைவி இருந்தும் அதை அனுபவிக்காமல். சூதாட்டம், சரக்கு போதையில் மனைவியை கண்டுக்காமல் விட்டுள்ளார். அதையும் மீறி அஞ்சு தட்டிக்கேட்டால் செம அடி அடிப்பாராம், இதனால் மனம் உடைந்துபோன அஞ்சு, தனது தூரத்து உறவினரான அதாவது அண்ணன் மகன் சிவாவிடம் சொல்லி அழுவாராம். ஆறுதல் சொல்லப்போன சிவா அத்தையை ஆறுதல் சொவதைப்போல அனுபவிக்க ஆசைப்பட்டுள்ளார்.
வயதான கணவனுடன் சுகமில்லை, அடி உதைதான் என்று அலுத்துப்போயிருந்த அஞ்சுவிற்கு சிவா உடனான நெருக்கம் ஆறுதலை தந்தது. இந்த ஆறுதல், தன்னை விட 14 வயதான சிறியவன் என்று கூட பார்க்காமல் நெருக்கமாக பழகியுள்ளார், கணவர் குமார் வெளியில் சென்ற கேப்பில் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இவ்விருவரும் ஒருநாள் பகலில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டிற்கு வந்த கணவன் நேரில் பார்த்ததால் பிரச்சினை வெடித்துள்ளது.
இதனால், ஒண்ணுத்துக்கும் பயன் இல்லாத கணவனை, சிவாவின் உல்லாச வாழ்க்கைக்காக தனது கணவனை தீர்த்துக்கட்ட சிவாவிடம் பேசியுள்ளார். குமாரை கொன்று விட்டு அத்தையோடு இருந்துவிட்டால் சாப்பாடு பிரச்சினை தீரும், செலவுக்கும் பணம் கிடைக்கும் என்று நினைத்த வேலை வெட்டி இல்லாமல் அத்தையே கதியாக கிடந்த சிவா, தனது நண்பர்களை படையிடம் 7000 ரூபாய் பேசி அதற்கு முன்பணமாக 2000 ரூபாயை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், பிளான் படி ஜூன் 7ஆம் தேதி மைனர் சிறுவர்களை தயாராக வரச்சொன்ன சிவா,
அத்தை அஞ்சுவிடம் சொல்லிவிட்டார். அஞ்சு தனது குழந்தையை அழைத்துக்கொண்டு கீழே இறங்கிப் போனாள். வீட்டில் குமார் தனியாக இருந்த சமயத்தில், சிவா, தன்னுடன் கூலிப்படையினரை அழைத்துக்கொண்டு குமார் இருந்த அறைக்குள் நுழைந்து, சிவா குமாரின் கையை பிடித்துக்கொள்ள கூலிப்படையினர் அவரது கழுத்தை அறுத்து கொண்டுவிட்டார்.
சூதாட்ட பகையால், தனது கணவனை கொன்றதாக அஞ்சு நாடகமாடியுள்ளார். ஆனால் நடவடிக்கைகள், செல்போன் பேச்சுக்கள் எதுவுமே நம்பும்படியாக இல்லை. போலீஸ் தங்கள் பாணியில் விசாரித்ததை அடுத்து உண்மையை ஒத்துக்கொண்டார் அஞ்சு. சிவாவுடனான உல்லாச வாழ்க்கைக்கு 7000 கொடுத்து கூலிப்படை ஏற்பாடு செய்து குமாரை கொன்ற சிவாவையும், கூட வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
அஞ்சுவிற்கு சிவா மாப்பிள்ளை அதாவது அண்ணன் மகன், தூரத்து உறவினர். தனது வீட்டிற்கு வந்து போய்க்கொண்டிருந்த சிவாவை வயது குறைவான பையன் என்றும் பார்க்காமல் தகாத உறவை வைத்துக்கொண்டு கணவனை வீட்டில் இருக்கும்போதே உல்லாசம் அனுபவித்து வந்தது மட்டுமல்லாமல் கணவனை கொன்றுள்ளார்.