Asianet News TamilAsianet News Tamil

சற்று முன் கோர்ட்டில் நடந்தது என்ன..? சிக்கிய வலுவான ஆதாரம்... வசமாக சிக்கிய ஷாருக்கான் மகன்..!

சட்டவிரோத பொருள்களை வைத்திருத்தல், நுகர்வு மற்றும் விற்பனை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான போதை மருந்து மற்றும் மனோதத்துவ பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்த மூவரும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

What happened in court a while ago ..? Strong evidence of being trapped ... Shah Rukh Khan's son who is comfortably trapped ..!
Author
Mumbai, First Published Oct 4, 2021, 4:30 PM IST

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யா கான் உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் அக்டோபர் 11 வரை ஆர்யா கானை காவலில் வைக்க கோரியுள்ளது. அவரது தொலைபேசியில் 'அதிர்ச்சியூட்டும், குற்றச்சாட்டுக்கு ஆதாரமும் இருப்பது' கண்டுபிடிக்கப்பட்டது.What happened in court a while ago ..? Strong evidence of being trapped ... Shah Rukh Khan's son who is comfortably trapped ..!

ஷாருக்கான் மகன் ஆர்யான் கான், அர்பாஸ் வியாபாரி மற்றும் முன்முன் தமேச்சா ஆகிய மூன்று பேர் மும்பை கடற்கரையில் ஒரு கப்பலில் சனிக்கிழமை இரவு நடந்த சோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டு, திங்கள்கிழமை வரை NCB காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 5 ஆம் தேதி வரை NCB கைது செய்யப்பட்ட மூவரையும் காவலில் வைக்க கோரியது. வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே, ஆரியா கானின் ஜாமீனுக்காக வாதாடினார். இது ஜாமீனில் வரக்கூடிய குற்றம் என்றும், அவரிடம் எந்தவிதமான தடயங்களும் இல்லை என்றும் வாதிட்டார். ஆனால் நீதிமன்றம் திங்கள் வரை மூவரையும் காவலில் வைத்தது.What happened in court a while ago ..? Strong evidence of being trapped ... Shah Rukh Khan's son who is comfortably trapped ..!

NCB மூன்று பேருக்கும் இடையில் வாட்ஸ் அப் உரையாடல்கள் ஆதாரமாக இருப்பதாக வாதிட்டது.  'போதை பொருள் விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்களுடன் வழக்கமான நடக்கும் அந்த உரையாடல்கள் ஆதாரமாக உள்ளதாக கூறியது.  சட்டவிரோத பொருள்களை வைத்திருத்தல், நுகர்வு மற்றும் விற்பனை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான போதை மருந்து மற்றும் மனோதத்துவ பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்த மூவரும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.What happened in court a while ago ..? Strong evidence of being trapped ... Shah Rukh Khan's son who is comfortably trapped ..!

ஆர்யா கான், அர்பாஸ் மற்றும் முன்முன் தமேச்சா தவிர, மற்ற ஐந்து பேரும், நுபுர் சரிகா, இஸ்மீத் சிங், மொஹக் ஜஸ்வால், விக்ராந்த் சோக்கர் மற்றும் கோமித் சோப்ரா ஆகியோரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் மூலம், ரெய்டைத் தொடர்ந்து எட்டு பேரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios