Asianet News TamilAsianet News Tamil

தாலி அறுந்தாலும் பரவாயில்லை.. எனக்கு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பது தான் முக்கியம்.. மனைவியின் கொடூர செயல்

வீரபாண்டி அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு அரசு பேருந்து நடத்துனர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

Virapandi husband murder..Wife arrested
Author
Theni, First Published Feb 10, 2021, 6:19 PM IST

வீரபாண்டி அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு அரசு பேருந்து நடத்துனர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் அரசமரத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (44). இவர் உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மணிமேகலை (40) என்ற மனைவியும், விஜய்மூர்த்தி (14), காமேஸ்வரன் (9) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மணிமேகலைக்கும், அதே பகுதியை சேர்ந்த மலைச்சாமி (43) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

Virapandi husband murder..Wife arrested

இந்த விவகாரம் நாளடைவில் ராஜேஷ்கண்ணனுக்கு தெரியவந்தது. பின்னர், இருவரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்கள் தங்களது கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் ராஜேஷ்கண்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக ராஜேஷ்கண்ணனை கொலை செய்ய மலைச்சாமி திட்டமிட்டார். இதற்கு மணிமேகலையும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

Virapandi husband murder..Wife arrested

அதன்படி, நேற்று முன்தினம் இரவு ராஜேஷ்கண்ணன் தனது வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, மணிமேகலையின் கள்ளக்காதலன் மலைச்சாமி, அம்மிக்கல்லை தூக்கி ராஜேஷ் கண்ணன் தலையில் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

Virapandi husband murder..Wife arrested

இதனையடுத்து, இதுகுறித்து உறவினர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜேஷ் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மலைச்சாமி மற்றும் அவரது மனைவி மணிகேமலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாலி கட்டிய கணவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios