Asianet News TamilAsianet News Tamil

சினிமா பாணியில் நடுரோட்டில் பெண்ணை ஓட ஓட வெட்டிய மர்ம கும்பல்...

திண்டுக்கல் அருகே சினிமா பாணியில் நடுரோட்டில் பெண்ணை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vadamadurai Run away... woman murder
Author
Tamil Nadu, First Published Nov 14, 2018, 12:20 PM IST

திண்டுக்கல் அருகே சினிமா பாணியில் நடுரோட்டில் பெண்ணை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கணேசன் மஞ்சுளா தம்பதி வசித்து வருகின்றனர்.. இவர்கள் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்வதை தொழிலாக செய்து வருகின்றனர். Vadamadurai Run away... woman murder

இந்நிலையில், திண்டுக்கல் சென்றுவிட்டு ஊர்திரும்பிய மஞ்சுளா, பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கார் தொடர்ந்து வந்துள்ளது. திடீரென அந்த காரில் இருந்து இறங்கிய கும்பல் அரிவாள் மற்றும் கத்தியுடன் விரட்டினர். மஞ்சுளாவை சாலையில் ஓட ஓட விரட்டி கொடூரமாக கொன்றனர். இதில் சம்பவ இடத்திலேயே மஞ்சுளா உயிரிழந்தார். 

இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மஞ்சுளா வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால், கொடுக்கல் - வாங்கல் தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vadamadurai Run away... woman murder

இதனையடுத்து கொலையாளிகளை கைது செய்யக் கோரி, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டப்பகலில், பெண் ஒருவரை, ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios