Asianet News TamilAsianet News Tamil

எந்தநேரமும் இரவில் தூங்க விடாமல் ஓயாத டார்ச்சர்.. ஆத்திரத்தில் கணவனை துடிக்க துடிக்க கொன்ற கொடூர மனைவி..!

தூத்துக்குடி தாளமுத்துநகர் அட்டகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(44). கூலி தொழிலாளி. இவருக்கு  திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும்  ஒரு மகனும்,  ஒரு மகளும் உள்ளனர். ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

Thoothukudi husband murder..Wife Arrest
Author
Thoothukudi, First Published Nov 1, 2021, 3:28 PM IST

தூத்துக்குடி அருகே குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளியை கழுத்தை நெரித்து மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி தாளமுத்துநகர் அட்டகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(44). கூலி தொழிலாளி. இவருக்கு  திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும்  ஒரு மகனும்,  ஒரு மகளும் உள்ளனர். ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை  ஏற்பட்டு வந்துள்ளது.

இதையும் படிங்க;- ஆசிரியை மகாலட்சுமி மாலையில் பணியிடை நீக்கம்.. 6 மணி நேரத்தில் சஸ்பெண்ட் வாபஸ் பெறப்பட்ட பின்னணி..!

Thoothukudi husband murder..Wife Arrest

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவர் குடித்து விட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி சுப்புலட்சுமி, கணவரை சத்தம் போடாமல் இருக்கச் சொல்லி மிரட்டியுள்ளார். ஆனாலும் ஆறுமுகம் தொடர்ந்து புலம்பிய படியே சத்தம்போட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரது தொல்லை தாங்க முடியாமல் போர்வை துணியை கொண்டு ஆறுமுகத்தின் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில், ஆறுமுகம் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. 

இது தெரியாமல் மனைவி தூங்க சென்றுவிட்டார். இதனையடுத்து, காலையில் ஆறுமுகத்தை மனைவி தட்டி எழுப்பியுள்ளார். அப்போது, மூச்சு பேச்சு இல்லாமல் கணவர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆறுமுகத்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

இதையும் படிங்க;- குழந்தைகள் கண்ணெதிரே பயங்கரம்.. ஒரே சேலையில் தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை.. நள்ளிரவில் கதறல்..!

Thoothukudi husband murder..Wife Arrest

இதுதொடர்பாக தாளமுத்து நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆறுமுகத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மனைவியே கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது மனைவியை கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios