Asianet News TamilAsianet News Tamil

தூத்துக்குடியில் பயங்கரம்.. திமுக பிரமுகரை துடிதுடிக்க கொடூரமாக வெட்டி கொன்ற கும்பல்..!

தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் மனோகரன். திமுக முன்னாள் கவுன்சிலர் தற்போது 45வது வட்ட செயலாளராக உள்ளார். இவர் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனமும் நடத்தி வந்தார். சண்முகபுரத்தில் உள்ள முனியசாமி கோவில் கொடைவிழா நேற்று இரவு நடைபெற்றது. அப்போது சில வாலிபர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்றதாகவும், அதில் ஒருவர் போதையில் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது. 

thoothukudi DMK Circular Secretary murder.. 2 people arrest
Author
Thoothukudi, First Published Aug 7, 2021, 2:40 PM IST

தூத்துக்குடி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக திமுக பிரமுகர் அதிகாலையில் 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் மனோகரன். திமுக முன்னாள் கவுன்சிலர் தற்போது 45வது வட்ட செயலாளராக உள்ளார். இவர் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனமும் நடத்தி வந்தார். சண்முகபுரத்தில் உள்ள முனியசாமி கோவில் கொடைவிழா நேற்று இரவு நடைபெற்றது. அப்போது சில வாலிபர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்றதாகவும், அதில் ஒருவர் போதையில் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது. இதைப்பார்த்த நடராஜன் அவர்களை கண்டித்துள்ளார். இதில், நடராஜனுக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்க கார்த்திக் (21) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பெரியவர்கள் சமாதானம்  செய்து அனுப்பி வைத்தனர். 

thoothukudi DMK Circular Secretary murder.. 2 people arrest

இந்நிலையில், நடராஜன் ராமசாமிபுரத்தில் உள்ள தனது ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்திற்கு சென்றார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த தங்க கார்த்திக், எப்படி என்னை கண்டிக்கலாம் என கூறி தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த தங்க கார்த்திக், அவரது நண்பர்களான அருண்குமார் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல் அரிவாளால் சரமாரியாக நடராஜனை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

thoothukudi DMK Circular Secretary murder.. 2 people arrest

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 7 பேர் கொண்ட கும்பல் நடராஜனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தங்ககார்த்திக், அருண்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios