Asianet News TamilAsianet News Tamil

ஓட ஓட தாத்தா, பேரன் வெட்டிக்கொலை.... தூத்துக்குடியில் பதற்றம்...!

தூத்துக்குடி அருகே நேற்று இரவு தாத்தா மற்றும் பேரனை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Thoothukudi 2 murder
Author
Tamil Nadu, First Published Dec 27, 2018, 3:32 PM IST

தூத்துக்குடி அருகே நேற்று இரவு தாத்தா மற்றும் பேரனை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டை அடுத்த பக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (65) இவர் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் ராமையா. இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் சுடலைமணி நெல்லையில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். Thoothukudi 2 murder

வழக்கம் போல சுடலைமணி காலை வேலைக்கு சென்றுவிட்டு, பின்னர் இரவு 10.30 மணிக்கு வேலை முடிந்து பேருந்தில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது செல்போனில் தொடர்பு கொண்டு தனது தாத்தா முத்துசாமியை பேருந்து நிறுத்தத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி முத்துசாமி பேரனை எதிர்பார்த்து பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தார். 

அப்போது பேருந்து வந்ததும் தனது தாத்தாவுடன் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். திடீரென அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் திடீரென சுடலைமணியை நோக்கி பாய்ந்தது. இதை கண்டதும் சுடலைமணி அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தார். ஆனால் சுடலைமணியை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க சென்ற அவரது தாத்தா முத்துமையையும் சரமாரியாக வெட்டினர். இதில் நிலை குலைந்து இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். Thoothukudi 2 murder

கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டைக் கொலை சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios