Asianet News TamilAsianet News Tamil

தெருநாயை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்... அதிர வைக்கும் வீடியோ..!

நாய்க்கு எதிரான மிருகத்தனமாகும். பலர் விலங்குகளை மதிக்காதது மற்றும் அவர்களின் பாலியல் வேட்கையை நிறைவேற்ற அவற்றைப் பயன்படுத்துவதால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. 

The youth who raped the street dog ... shocking video ..!
Author
Maysoor, First Published Feb 16, 2021, 1:37 PM IST

தெருநாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக மைசூரை சேர்ந்த ஒருவர் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் சோமாசேகர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த கொடூரமான செயல் வீடியோவில் சிக்கியுள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோ ஆதாரங்களை சேகரித்த விலங்கு நல அதிகாரியின் புகாரைத் தொடர்ந்து வி.வி.புரம் காவல் நிலையம் 30 வயது இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மைசூருவின் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்  விலங்கு நல அலுவலர் ஹரிஷ் கே.பி., கோகுளம் கணபதி கோவிலின் பிரதான சாலையில் ஒரு நபர் தெருநாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தார். பிப்ரவரி 11 அன்று நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ ஹரீஸுக்கு கிடைத்ததை அடுத்து அளித்துள்ளார்.

The youth who raped the street dog ... shocking video ..!

“வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது விரல்களையும் பிறப்புறுப்புகளையும் செருகுவதைக் காணலாம். இது இயற்கையின் ஒழுங்கிற்கு எதிரான உடலுறவில் ஈடுபடுவதைக் குறிக்கிறது. இது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும். நாங்கள் புகார் அளித்துள்ளோம், நாய் இன்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.” என்று அவர் கூறினார்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாடுகள், கோழிகள், குரங்குகள் மீது இதேபோன்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“இது ஒரு நாய்க்கு எதிரான மிருகத்தனமாகும். பலர் விலங்குகளை மதிக்காதது மற்றும் அவர்களின் பாலியல் வேட்கையை நிறைவேற்ற அவற்றைப் பயன்படுத்துவதால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. இது போன்ற கொடூர குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios