Asianet News TamilAsianet News Tamil

இளம் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி திருமணம்.. 3வது திருமணத்திற்கு தயாரான 26 வயசு இளைஞன் கைது.

இந்நிலையில் அந்தப் பெண் 11 மாத கர்ப்பமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தனபாலனின் பெற்றோர்கள் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க 3வதாக பெண் பார்த்து வந்ததாக தெரிகிறது.

The young man threat with porn video and married the young woman...  26-year-old man arrested for preparing for 3rd marriage
Author
Chennai, First Published Sep 21, 2021, 9:17 AM IST

இரண்டு காதல் மனைவிகளையும் ஏமாற்றி மூன்றாவதாக திருமணம் செய்ய முயன்ற பலே கில்லாடியை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரையில் தான் இந்த மோசடி சம்பவம் நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதை தடுக்க எத்தனையோ நடவடிக்கைகளை காவல்துறையும் அரசும் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆண்களிடம் திருமண ஆசைக்காக பெண்கள் மோசடிக்குள்ளாகும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இந்த வரிசையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு திருமணங்களை செய்த இளைஞர் மூன்றாவதாக பெண் ஒருவரை திருமணம் செய்து முயற்சித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

The young man threat with porn video and married the young woman...  26-year-old man arrested for preparing for 3rd marriage

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாவினிப்பட்டி சேர்ந்தவர் சின்னப்பாண்டி அவரது மகன் தனபாலன் (26) இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாளையத்தில் கிளினிக்கில் வேலை செய்து வந்தார், அப்போது அங்கு பணியாற்றிய  சித்ரா என்ற பெண்ணை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து கொண்டார். முன்னதாக சித்ரா தன்னை காதலிக்க மறுத்து வந்த நிலையில் அவரை ஆபாசமாக படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வந்ததால், வேறு வழியின்றி சித்ரா தனபாலனை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் சித்ராவிடம் வரதட்சணை கேட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்ததால், அவர் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர்  எப்படியோ சித்ராவை சமாதானம் செய்து கணவன் தனபாலன் சித்ராவின் இல்லத்திலேயே தங்கி வசித்து வந்தார்.

The young man threat with porn video and married the young woman...  26-year-old man arrested for preparing for 3rd marriage

இந்நிலையில் சித்ராவுக்கும் தனபாலன் 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இதிலேயே தனபாலன் உசிலம்பட்டியில் கிளினிக் ஒன்றில் பணியாற்றி வந்தார் அங்கு பணியாற்றிய ஆர்த்தி என்ற பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது, பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட தனபாலன் அவரை மதுரையில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் 11 மாத கர்ப்பமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தனபாலனின் பெற்றோர்கள் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க 3வதாக பெண் பார்த்து வந்ததாக தெரிகிறது. இதேவேளையில் தனபாலனுக்கு அடிக்கடி போன் கால் வந்ததால் சந்தேகமடைந்த அவரது முதல் மனைவி சித்ரா அவரது செல்போனை ஆராய்ந்ததில் அவருக்கு ஆர்த்தி என்ற பெண்ணுடன் இரண்டாவது திருமணம் நடந்ததும், அந்த பெண் கர்ப்பமாக இருப்பதும், அதேவேளையில் அவருக்கு மூன்றாவதாக திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வருவதும் தெரியவந்தது.

The young man threat with porn video and married the young woman...  26-year-old man arrested for preparing for 3rd marriage

அதில் அதிர்ச்சி அடைந்த சித்ரா தன்னை ஏமாற்றி திருமணம் செய்த கணவர், தற்போது மூன்றாவதாக திருமணம் செய்ய முயன்று வருவது குறித்தும் உசிலம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தனபாலனை கைது செய்தது உசிலம்பட்டி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரு பெண்களை மிரட்டி காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்த நபர் மூன்றாவதாக பெண் ஒருவரை திருமணம் செய்ய முயற்சித்திருப்பது  உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios