Asianet News TamilAsianet News Tamil

அடிக்கடி வெளியூர் சென்ற கணவன்.. மேல் வீட்டு இளைஞருடன் விபரீத உறவு.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்.

இதைப் பார்த்த வீட்டின் உரிமையாளர், வீட்டுக்குள் ஒரு இளைஞன் சென்றதை பார்த்துவிட்டார், உடனே கதவு மூடிக் கொண்டது, சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர்,  கதவைதட்டினார், கதவு திறக்கப்படவில்லை, நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவை யாரும் திறக்காததால், கதவை வெளியில் தாழிட்டு விட்டு அவரது கணவர் சிவகனகராஜாவுக்கு தகவல் கொடுத்தார் அவர். 

The policeman who often went abroad .. flirting with the youth of the upper house .. wife frenzy.
Author
Chennai, First Published Aug 12, 2021, 4:39 PM IST

தன் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்த 24 வயது இளைஞரை போலீஸ்காரர் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமூகத்தில் எத்தனை செல்வாக்கு நிறைந்த மனிதராக இருந்தாலும் கூட  கட்டிய மனைவி ஒழுக்கமானவராக இல்லை என்றால் அது அந்த நபரை ஒரு கொலை செய்யும் அளவிற்கு கூட கொண்டு சென்றுவிடும் என்பதற்கு உதாரணமாக ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் படமாட்டா  காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ராமலிங்கேஸ்வரர் நகரில் உள்ள புட்டா  சாலையில் சிவகனகராஜா என்ற போலீஸ்காரர் ஒருவர் தனது மனைவி பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். 

The policeman who often went abroad .. flirting with the youth of the upper house .. wife frenzy.

அதே நேரத்தில் மசிலிபட்டினத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (24) என்ற இளைஞர் ஒருவர் அதே வீட்டில் மேல்தளத்தில் குடியிருந்து வந்தார். அந்த இளைஞன் அதே பகுதியில் ஐஸ்க்ரீம் கடை ஒன்றையும் நடத்தி வந்தார். இந்நிலையில் வெங்கடேஷுக்கும்  கீழ் வீட்டில் குடியிருந்த காவலரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது நாளடைவில் காதலாக மாறி, இருவரும் அடிக்கடி கணவன் இல்லாதபோது வீட்டில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த கள்ளக்காதல் சில வருடங்களாக யாருக்கும் தெரியாத ரகசியமாக இருந்தது. பின்னர் மனைவியின் நடவடிக்கைகளில் காவலருக்கு சந்தேகம் ஏற்பட்டது, அதேபோல அக்கம் பக்கத்தினர் அவரது மனைவிக்கும், மேல் வீட்டில் குடியிருக்கும் இளைஞனுக்கும்  இடையே உள்ள நெருக்கத்தை காவலரிடம் போட்டுக் கொடுத்தனர். 

The policeman who often went abroad .. flirting with the youth of the upper house .. wife frenzy.

இதுகுறித்து தனது மனைவியை கண்டித்த அவர், வீட்டின் உரிமையாளரிடம் புகார் அந்த இளைஞரை வீட்டைவிட்டு காலி செய்ய வைத்தார் காவலர் சிவகனகரஜா. அதனையடுத்து அந்த வாலிபர் மசிலிப்பட்டினத்திறே சென்றார், இருப்பினும் காவலர்  சிவகனகராஜா பணி நிமித்தமாக வேறு ஊருக்கு இடமாறுதல் ஆனதால் மனைவியை தனியே விட்டு பணிக்கு சென்றார். இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த இளைஞரும் காவலர் மனைவியும் கபுராவும் மீண்டும் பழையபடி சந்தித்து தனிமையில் உல்லாசம் அனுபவிக்க ஆரம்பித்தனர். இருவரும் பல மணிநேரம் அடிக்கடி தொலைபேசியில் உரையாடி வந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த இளைஞர் வெங்கடேஷ் காவலரின் மனைவி கபூராவை சந்திக்க அவரது இல்லத்திற்கு வந்தார். அதேநேரத்தில் காவலர் சிவ கனகராஜ் அன்று இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டார் அவர் எப்போது புறப்படுவார் என்று காத்திருந்த வாலிபர் வெங்கடேஷ் இரவு முழுக்க கள்ளக்காதலியுடன் தங்கி உல்லாசம் அனுபவித்தார். அதேபோல் புதன்கிழமை  இரவும் யாரும் இல்லாத நேரத்தில் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து காவலரின் வீட்டுக்குள் நுழைந்தார் வெங்கடேஷ்.

The policeman who often went abroad .. flirting with the youth of the upper house .. wife frenzy.

இதைப் பார்த்த வீட்டின் உரிமையாளர், வீட்டுக்குள் ஒரு இளைஞன் சென்றதை பார்த்துவிட்டார், உடனே கதவு மூடிக் கொண்டது, சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர்,  கதவைதட்டினார், கதவு திறக்கப்படவில்லை, நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவை யாரும் திறக்காததால், கதவை வெளியில் தாழிட்டு விட்டு அவரது கணவர் சிவகனகராஜாவுக்கு தகவல் கொடுத்தார் அவர். ஆத்திரத்தில் வீட்டுக்கு வந்த சிவகனகராஜா வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பார்த்தபோது தனது மனைவியுடன் இளைஞர் வெங்கடேஷ் நிர்வாண நிலையில் படுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த இளைஞரை பிடித்து, கை, கால்களை கட்டிபோட்ட காவலர் சமையில் அறையில் இருந்த பாத்திரங்களால் அந்த இளைஞரை கடுமையாக தாக்கினார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios