Asianet News TamilAsianet News Tamil

திருமணமான அரைமணி நேரத்தில் காதலனுடன் மணப்பெண் எஸ்கேப்.. கணவன் கண்ணில் மண்ணை தூவி பயங்கரம்.

திருமணமான அரை மணி நேரத்தில் மணப்பெண் காதலனுடன் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போகும்போது நகை மற்றும் தங்க நகைகளுடன் அந்தப் பெண் மாயமானது மாப்பிள்ளை வீட்டாரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. 

The bride escapes with her boyfriend within half an hour of the wedding.
Author
Chennai, First Published Sep 20, 2021, 10:39 AM IST

திருமணமான அரை மணி நேரத்தில் மணப்பெண் காதலனுடன் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போகும்போது நகை மற்றும் தங்க நகைகளுடன் அந்தப் பெண் மாயமானது மாப்பிள்ளை வீட்டாரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. காதல் என்ற ஒரு வார்த்தை பல குடும்பங்களை மோசமான மன உளைச்சலுக்கு ஆளாகும் அவ சொல்லாக மாறி வருகிறது. காதலின் பெயரால் நடக்கும் சில நிகழ்வுகள் பலரின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போடும் அளவிற்கு மோசமான அனுபவத்தை தந்துவிடுகிறது. இந்த வரிசையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.  

The bride escapes with her boyfriend within half an hour of the wedding.

சம்ரீன் பேகம் என்ற பெண் பெங்களூருவைச் சேர்ந்த முகமது இலியாஸ் (22) என்பவருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பெரியவர்களின் சம்மதத்துடன் வெள்ளிக்கிழமை இரவு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பாலாப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம்  இஸ்லாமிய முறைப்படி நடந்தது. திருமணத்திற்கு முன்பு 2 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரொக்கப்பணம் வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுக்கப்பட்டது. திட்டமிட்டபடி திருமணம் நடந்து முடிந்த நிலையில், இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருந்தனர். இந்நிலையில் மணமகள்  அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டார். தனது தோழியுடன் பியூட்டி பார்லருக்கு வெளியே செல்வதாக கூறினார். அப்போது அவருக்கு பாதுகாப்பாக உறவினர்கள் இருவர் அவருடன் சென்றனர். அப்போது பியூட்டி பார்லர் அருகே காரில் இருந்து கீழே இற்ங்கிய அந்த பெண் அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மாயமானார்.

The bride escapes with her boyfriend within half an hour of the wedding.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், இரு குடும்பத்தாருக்கும் தகவல் கூறினர். இதையடுத்து காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது, போலீசார் நடத்திய விசாரணையில் காதலுடன் அந்தப் பெண் தப்பியது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் குடும்பத்தார் தங்களுக்கு சேரவேண்டிய பணம் மற்றும் நகைகளை கொடுக்கும்படி கூறினார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. மகள் செய்த காரியத்திற்காக கடும் அதிர்ச்சியில் உறைந்த அவரது பெற்றோர்கள் மனமகன் வீட்டாரிடம் மன்னிப்பு கோரினர். இந்நிலையில் போலீசார் அந்த பெண்ணை அழைத்தச் சென்ற காதலன் யார் என்பவன உள்ளிட்டவைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios