Asianet News TamilAsianet News Tamil

லாவகமாக பேசி லாட்ஜிக்கு வரவழைத்து இளம்பெண் கதற கதற பலாத்காரம்.. எஸ்கேப்பான ராணுவ வீரர்..!

சிறிது நேரம் வேலை சம்பந்தமாக பேசியுள்ளனர். பின்னர், அந்த வாலிபரின் பேச்சு வேறுவிதமாக திரும்பியது. இளம்பெண்ணை தொட்டு சில்மிஷம் செய்துள்ளார். ஆனால், இளம்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், வலுக்கட்டாயமாக அவர் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

teenager girl Rape in coimbatore
Author
Coimbatore, First Published Aug 9, 2021, 2:32 PM IST

கோவையில் வேலைக்கு முயற்சி செய்து வந்த இளம்பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர். 

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஓர்க்‌ ஷாப்பில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அந்த பெண் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். தனக்கு தெரிந்தவர்களிடம் வேலை இருந்தால் சொல்லுங்கள் என தெரிவித்து வைத்திருந்தார். அப்போது, அவருக்கு தூரத்து உறவினரான தேனி மாவட்டம் போடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பழக்கமானார்.  அவர் இளம்பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தார்.

teenager girl Rape in coimbatore

இதனிடையே, கடந்த மாதம் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட அவர் உனக்கு நான் வேலை ஏற்பாடு செய்து விட்டேன். கோவை வருகிறேன்.  வேலை விஷயமாக உன்னிடம் ஒருவரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். சுந்தராபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நேரில் சந்தித்து மற்றவற்றை பேசிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். அந்த வாலிபரின் நயவஞ்சகம் புரியாமல் இளம்பெண்ணும் அப்பாவித்தனமாக தனது குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு அவர் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த வாலிபர் மட்டும் இருந்துள்ளார். சிறிது நேரம் வேலை சம்பந்தமாக பேசியுள்ளனர். பின்னர், அந்த வாலிபரின் பேச்சு வேறுவிதமாக திரும்பியது. இளம்பெண்ணை தொட்டு சில்மிஷம் செய்துள்ளார். ஆனால், இளம்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், வலுக்கட்டாயமாக அவர் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

teenager girl Rape in coimbatore

இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியில் வீடு திரும்பிய அந்த இளம்பெண் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது அவரது தூரத்து உறவினர் சரவணன்(38) என்பதும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.  இவர் ராணுவ வீரராக உள்ளார். வீடுமுறையில் வந்த அவர் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்து ராணுவ வீரரை தேடி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios