Asianet News TamilAsianet News Tamil

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார் பாலியல் தொல்லை ஆசிரியர் ராஜகோபாலன்... காவல்துறை உத்தரவு..!

சென்னை கே.கே.நகர் பள்ளியில் எழுந்த பாலியல் புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 

Teacher Rajagopalan arrested for sexual harassment ... Police order
Author
Tamil Nadu, First Published Jun 25, 2021, 6:04 PM IST

சென்னை கே.கே.நகர் பள்ளியில் எழுந்த பாலியல் புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை கே.கே. நகர் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரட்டுள்ளார்.Teacher Rajagopalan arrested for sexual harassment ... Police order

சென்னை கே.கே.நகரில் உள்ள தனியர் பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் கூறியது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Teacher Rajagopalan arrested for sexual harassment ... Police order

முன்னதாக, மாணவிகளின் தொடர் புகாரால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஆசிரியர் ராஜகோபாலனை நீதிமன்ற அனுமதியுடன் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். இதில், கடந்த 10 ஆண்டுகளாக பள்ளியில் 11,12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு அதிக மதிப்பெண் எடுக்க உதவி செய்வதாக கூறியும், சிறப்பு வகுப்பு என மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து விடுமுறை நாட்களில் பள்ளி அறையிலேயே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும், அதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்திருந்ததும் தெரியவந்தது.  இந்நிலையில், பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios