ஆந்திராவில் வீட்டில் இருந்த 9 ஆம் வகுப்பு மாணவியை, அவர் படித்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கழுத்தை பிளேடால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரமாநிலம்கர்னூல்மாவட்டம், பங்காரப்பேட்டையில்உள்ளராக்வெல்உயர்நிலைபள்ளியில் 9 ம்வகுப்புபடிக்கும்மாணவி சந்தியா. அந்த மாணவியிடம் அங்கு, பணிபுரியும்சங்கர்என்றஇந்திஆசிரியர் அடிக்கடி பாலியல் வன்முறை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அதில் இருந்து அந்த மாணவியும் தப்பி வந்திருக்கிறார்.

அதே நேரத்தில் இதை வெளியில் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று சந்தியாவை ஆசிரியர் சங்கர் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து கொண்டு அந்த மாணவியும் இதை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சங்கர் அந்த மாணவி வகுப்பில் தனியாக இருக்கும்போது பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்பபோதும் மாணவி தப்பி வந்துள்ளார்.

நிலைமை மோசமாவதை உணர்ந்த சந்தியா இகு குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார்இதையடுத்துகோபமடைந்ததாயார், பள்ளிக் சென்று சங்கருக்குஎச்சரிக்கைவிடுத்திருந்தார்.


இந்நிலையில், இன்று காலைமாணவிசந்தியா வீட்டில் தனியாகஇருந்தபோது, அங்குவந்தசங்கர், அவரின்கழுத்தைபிளேடால்அறுத்தார். மாணவியின்அலறல்சத்தத்தைகேட்டஅக்கம்பக்கத்தினர், உடனடியாகஅங்குவந்து, மாணவியைமீட்டுமருத்துவமனையில்அனுமதித்தனர்.

மேலும், சங்கரைகடுமையாகதாக்கிய பொது மக்கள் அவரை போலீசாரிடம்ஒப்படைத்தனர். படுகாயமடைந்த சந்தியா மருத்துவமனையில்ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.