Asianet News TamilAsianet News Tamil

நடத்தையில் தீராத சந்தேகம்.. நடுஇரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி.. கணவர் செய்த பகீர் காரியம்..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி (31). இவர் தனியார் வாடகை வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி ராதிகா (26). இவர்களுக்கு 6 வயதில் மகள் இருக்கிறாள். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராதிகா கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்ததையடுத்து கணவருடன், ராதிகா சேர்ந்து குடும்பம் நடத்தினார்.

Suspicion of behavior.. wife murder...Van driver arrest
Author
Ramanathapuram, First Published Sep 25, 2021, 12:27 PM IST

ராமநாதபுரம் அருகே மனைவியை நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தூங்கும் போது கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி (31). இவர் தனியார் வாடகை வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி ராதிகா (26). இவர்களுக்கு 6 வயதில் மகள் இருக்கிறாள். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராதிகா கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்ததையடுத்து கணவருடன், ராதிகா சேர்ந்து குடும்பம் நடத்தினார்.

Suspicion of behavior.. wife murder...Van driver arrest

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதிகாவின் கழுத்தில் அணிந்திருந்த தாலியை யாரோ அறுத்து சென்று விட்டனர். இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. மனைவியின் நடத்தையில் மாடசாமி சந்தேகம் வலுத்தது. 

Suspicion of behavior.. wife murder...Van driver arrest

நேற்று இரவு ராதிகா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆத்திரத்தில் இருந்த மாடசாமி ராதிகா கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கணவர்  மாடசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios