Asianet News TamilAsianet News Tamil

12 ஆண்டுகளாக குழந்தை இல்லை... நடத்தையில் சந்தேகம்... நடு ராத்திரியில் நடுங்க வைத்த படுகொலை..!

ஊத்தங்கரை அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கணவன் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Suspicion of behavior...wife murder...husband arrest
Author
Namakkal, First Published Nov 9, 2020, 6:18 PM IST

ஊத்தங்கரை அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கணவன் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே உள்ள பள்ளசூளகரை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (36). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி ருக்குமணி (30). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ருக்குமணி போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

Suspicion of behavior...wife murder...husband arrest

இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த தங்கராஜ், அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார். அதேபோல், நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் தூங்க சென்று விட்டனர்.

Suspicion of behavior...wife murder...husband arrest

நடு இரவில் போதையில் இருந்த தங்கராஜ் எழுந்தார். அப்போது, வீட்டில் தூங்கி கொண்டிருந்த ருக்குமணியின் தலையில் கல்லை போட்டுள்ளார். இதில், ருக்கமணி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ருக்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்து கணவர் தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தியதில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios