சேலம் மாவட்டம் ஜாகீர்ரெட்டிப்பட்டி ஓடை தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(31). இவரது மனைவி மணிமேகலை(28).  இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு ஆளான ரமேஷ் தினமும் குடித்து விட்டு வீட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகம் அடைந்தார். 

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை அடித்து துன்புறுத்திய கணவரின் தலையில் குளவி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சேலம் மாவட்டம் ஜாகீர்ரெட்டிப்பட்டி ஓடை தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(31). இவரது மனைவி மணிமேகலை(28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு ஆளான ரமேஷ் தினமும் குடித்து விட்டு வீட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகம் அடைந்தார். 

இதையும் படிங்க;- நான் உன்னால தான் மூணு மாசம் கர்ப்பமா இருக்கேன்! கல்யாணம் பண்ணிக்கோ! டார்ச்சர் செய்த காதலியை கொன்றேன் பகீர்

இதனால் தினந்தோறும் குடித்துவிட்டு மணிமேகலையை அடித்து உதைத்து வந்துள்ளார். வழக்கம் போல நேற்று இரவும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். பின்னர், தூங்க சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை வீட்டில் இருந்த குளவி கல்லை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த ரமேசின் தலையில் போட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதையும் படிங்க;- அண்ணியை கரெக்ட் செய்ய நினைத்த கொழுந்தன்.. விஷயம் தெரிந்த அண்ணன்.. இறுதியில் நடந்த பயங்கரம்..!

இதனையடுத்து, இரவு முழுவதும் கணவரின் உடலுடன் வீட்டிலிருந்த மணிமேகலை சூரமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற சூரமங்கலம் போலீசார் ரமேஷின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.