தொடரும் மாணவர் தற்கொலைகள் !! சிக்கலில் எஸ்ஆர்எம் கல்லூரி !!
சென்னை பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விடுதியில் கடந்த இரண்டு நாட்களில் ஒரு மாணவியும், ஒரு மாணவரும்அடுத்தடுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துத் துறையில் 4 ஆவது ஆண்டு படித்த திருவள்ளூர் மாவட்டம் பென்னேரியை சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி 9-வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக மனஅழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். என கூறப்பட்டது. இதையடுத்த அவரது பெற்றோர்களும், உறவினர்களும் அனுப்பிரியாவின் உடலை வாங்கி சென்றனர்.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனிரூத் என்ற மாணவர் நேற்று தற்கோலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிரூத் ஈ.சி.ஈ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
விடுதியில் தங்கி படித்து வந்த அவர் நேற்று இன்று காலை, 2ஆவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அனிரூத் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கல்லூரி விடுதியில் மாணவியும், மாணவனும் தற்கொலை செய்து கொண்டதால் கல்லூரியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.