உன் புருஷன விட்ரு.. நினைக்கும் போதெல்லாம் பயிற்சி மருத்துவரை அறைக்கு அழைத்து உடலுறவு.. 52வயது Dr. அட்டூழியம்.
விரைவில் பணி நிரந்தரம் செய்வதாக கூறி பயிற்சி மருத்துவரை சீனியர் டாக்டர் கற்பழித்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பலமுறை அறைக்கு அழைத்துச் சென்றும் மருத்துவமனை அலுவலகத்தில் வைத்தும் அந்தப் பெண்ணை மிரட்டி மருத்துவர் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இது குஜராத் மாநிலம் கெடாவில் நடந்துள்ளது.
விரைவில் பணி நிரந்தரம் செய்வதாக கூறி பயிற்சி மருத்துவரை சீனியர் டாக்டர் கற்பழித்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பலமுறை அறைக்கு அழைத்துச் சென்றும் மருத்துவமனை அலுவலகத்தில் வைத்தும் அந்தப் பெண்ணை மிரட்டி மருத்துவர் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இது குஜராத் மாநிலம் கெடாவில் நடந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசும் காவல்துறையினர் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. காதலிப்பதாக கூறி பெண்களை கற்பழித்து மோசடி செய்வது, காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்து பின் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது, பணியிடங்களில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்வது போன்ற எண்ணற்ற கொடூரங்கள் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வருகிறது.
இதையும் படியுங்கள்: அத்தைமீது ஏற்பட்ட விபரீத ஆசை.. வாடகைக்கு வீடு எடுத்து இஷ்டத்துக்கு உல்லாசம் ... தனி அறையில் நடந்த கொடூரம்.
இந்த வரிசையில் பயிற்சி பெண் மருத்துவரை மருத்துவக் கண்காணிப்பாளர் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குஜராத் மாநிலம் கெடா மாவட்டம் டாகோர் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டகோர் துணை மாவட்ட மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக உள்ளவர் அஜய் வாலா (52) இவரின் கீழ் பல மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர் இம்மருத்துவமனையில் 8 வருடங்களாக பணியாற்றிவருகிறார், இவர் மீது அம்மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
அதில் டாக்டர் அஜய் வாலா மருத்துவமனையில் தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும், விரைவில் பணி நிரந்தரம் செய்வதாகவும் கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்துவந்தார், மேலும் தனது டாக்டர்கள் குடியிருப்புக்கு அழைத்துச்சென்றும் பல நேரங்களில் அலுவலகத்திற்கு வரவழைத்தும் என்னுடன் உடலுறவில் ஈடுபட்டார் என அந்த பெண் கூறியுள்ளார். டாக்டர் அஜய் வாலா கடந்த 7 ,8 ஆண்டுகளாக மருத்துமனையில் கண்காணிப்பாளராக இருந்த வருகிறார் என்றும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர் தன்னுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்ததாகவும் பெண் மருத்துவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: ஃபர்ஸ்ட் நைட் முடிந்த மறுநாளே இளம்பெண் செய்த காரியம்.. 15 லட்சத்தை இழந்த புதுமாப்பிள்ளை கதறல்.!
மேலும் கணவரை விவாகரத்து செய்து விட்டு வரும்படி தன்னை தொடர்ந்து அஜய் வாலா டார்ச்சர் செய்து வருவதாகவும், ஒரு கட்டத்தில் அவரது தொல்லை அதிகரிக்கவே தாங்க முடியாமல் இந்த புகாரை தெரிவிப்பதாகவும் அவர் அதில் கூறியுள்ளார். மருத்துவ கண்காணிப்பாளர் மீது அந்த பெண் மருத்துவர் கொடுத்துள்ள புகாரின் பேரில் டாக்டரா அஜய் லாலா மீது போலீசார் கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ளார் டகோர் காவல்நிலைய எஸ்ஐ பிரியா, குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் அஜய் லாலா குஜராத் மாநிலம் அனந்தபூரில் வசித்து வருகிறார், கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் டகோர் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார், திருமணமானவர், இருந்தபோதிலும் மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.