பெண் காவலரை திருமணம் செய்து கொண்ட SI.. கர்பமாக மனைவியை வயிற்றில் எட்டி உதைத்து கொடூரம்..
பெண் காவலரை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் அந்தப் பெண்ணின் கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி துன்புறுத்தி வந்த சப்-இன்ஸ்பெக்டர் கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண் காவலரை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் அந்தப் பெண்ணின் கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி துன்புறுத்தி வந்த சப்-இன்ஸ்பெக்டர் கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கர்ப்பத்தில் உள்ள குழந்தையை கொலை செய்யும் நோக்கில் மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்து கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க அரசும், காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. சமூகத்தில் பொறுப்புள்ள அந்தஸ்தில் இருப்பவர்கள் கூட பெண்களுக்கு எதிரான வன்கொடுமை களில் ஈடுபட்டு, அதில் கையும் களவுமாக பிடிபடும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. இந்த வரிசையில் உடன் பணியாற்றும் பெண் காவலரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சப்-இன்ஸ்பெக்டர் அந்தப் பெண்ணை அடித்து கொடுமை செய்து வந்த நிலையில், கைதாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பொனகேபள்ளியைச் சேர்ந்தவர் எஸ்.கே சுபானி, இவர் நெல்லூர் 3 டவுன் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐஆக் பணிபுரிந்து வந்தார். அதே நெல்லூர் மாவட்டம் பித்ராகுண்டவை சேர்ந்த லட்சுமி பிரசன்னா என்ற பெண்ணும் அதை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சுபானி மற்றும் லக்ஷ்மி பிரசன்னா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையும் படியுங்கள் :
ஆனாலும் சுபானி அந்தப் பெண்ணை வற்புறுத்தி கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்கள் மகிழ்ச்சியாக இருந்தனர் அதன்பிறகு சுபானி தனது கொடூர முகத்தை காட்ட ஆரம்பித்தார். மனைவியிடம் காரணமே இல்லாமல் ஆத்திரப்படுவது அடித்து துன்புறுத்துவது. மிக மோசமாக சித்திரவதை செய்வது போன்ற கொடுமைகள் ஈடுபட்டுவந்தார். குழந்தை பிறந்தால் பிரச்சனை சரியாகிவிடும் என அவரது மனைவி லட்சுமி பிரசன்னா நம்பி வந்தார். அதேபோல அவர் கர்ப்பமானார், இதுகுறித்து கணவரிடம் கூறினார், அதைக்கேட்டு ஆத்திரமடைந்த கணவர் முன்பை விட மனைவியை அதிகமாக அடிக்க ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் மனைவியின் கர்ப்பத்தை கலைக்க சொல்லி மிருகத்தனமாக நடந்து கொண்டார், வயிற்றில் உள்ள குழந்தையை கொலை செய்யும் நோக்கில் மனைவியை காலால் எட்டி உதைத்து கொடூரமாக நடந்துகொண்டார். இதனால் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் லட்சுமி பிரசன்னா சுவற்றில் மோதி தற்கொலைக்கு முயன்றார்.
இதையும் படியுங்கள்: திருவெறும்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பால்கடைக்காரர்
ஆனால் முடியவில்லை, அதில் சுய நினைவு வந்த பிறகு அவர் 100-க்கு போன்செய்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லட்சுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் லட்சுமி தனது கணவன் செய்யும் அட்டூழியங்களை கூறி கதறி அழுதார்.
இதையும் படியுங்கள் : மனைவி அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ்.. மனமுடைந்த லோகேஷ்..தற்கொலைக்கான காரணத்தை கூறி கதறிய தந்தை.
பின்னர் இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எஸ்எஸ்ஐ சுபானி மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தலைமறைவாக இருந்த சுபானியை போலீசார் கைது செய்துள்ளனர்.