Asianet News TamilAsianet News Tamil

அவள் ஒரு சேடிஸ்ட்.. 10 ஆண்டுகள் காதலிப்பதாக கூறி கழற்றி விட்டாள்.. தூக்கில் தொங்கிய காதலன்.

காதலிப்பது போல் நடித்து 10 ஆண்டுகள் கழித்து காதலி திருமணம் செய்ய முடியாது என மறுத்ததால் காதலன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

She is a sadist .. a woman who love for 10 years and cheating .. a boyfriend who hanged himself.
Author
Chennai, First Published Jun 1, 2022, 7:58 PM IST

காதலிப்பது போல் நடித்து 10 ஆண்டுகள் கழித்து காதலி திருமணம் செய்ய முடியாது என மறுத்ததால் காதலன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

அன்பின் மகத்துவம் சிலருக்கு தெரிவதில்லை, அதை பயன்படுத்தி பலரை மோசடி செய்கின்றனர், இது போன்ற மோசடிகளில் பெண்கள் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். உலகமே நீதான், உனக்காக உயிரையே கொடுப்பேன் போன்ற வசனங்களை பேசி காதல் வலையில் வீழ்த்தும் வேலைகள் பரவலாக நடந்து வருகிறது, பிறகு காரியம் முடிந்ததும் அவர்களை கழட்டி விடும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.  உண்மையாக நேசிப்பவர்கள் தன்னை நேசிப்பவர்கள் ஏமாற்றுவதை சகிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வரிசையில் கர்நாடக மாநிலத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

She is a sadist .. a woman who love for 10 years and cheating .. a boyfriend who hanged himself.

கிட்டத்தட்ட பத்தாண்டு காதல் சோகமாக மாறியுள்ளது, கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் சங்கர்பூரைச் சேர்ந்தவர் சேத்தன், கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர் சரக்கு வாகனம் ஓட்டுனராக இருந்து வருகிறார், அவரது காதலி எதை விரும்பி கேட்டாலும் அதை உடனே செய்யது முடிக்கும் காதலனாக சேத்தன் இருந்து வந்தார். எதைக்கேட்டாலும் காதலி காஸ்லியாகவே கேட்பார். இருவரும் அடிக்கடி சந்தித்து ஜாலியாக ஊர் சுற்றுவார்கள் ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த இளம்பெண்ணிடம் சேத்தன் வேடிக்கையாக கேட்டார். ஆனால் அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்துவிட்டார். விளையாட்டுக்குச் சொல்கிறாள் என்று சேத்தன் எண்ணினார் ஆனால் அந்தப் பெண் உண்மையை சொல்கிறார் என்பது சில நாட்களுக்குப் பின்னரே சேத்தன் புரிந்து கொண்டார். ஒன்பது ஆண்டுகள் காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுக்க காரணம் என்ன என கேட்டார்.

She is a sadist .. a woman who love for 10 years and cheating .. a boyfriend who hanged himself.

ஆனால் அதற்கு காதலியிடத்திலிருந்து பதில் இல்லை, எவ்வளவோ கெஞ்சி கூத்தாடினார் சேத்தன், ஆனால் திருமணத்திற்கு காதலி சம்மதிக்கவேயில்லை, இதனால் மனமுடைந்த சேத்தன் தனது வலிகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார், ஒன்பது ஆண்டுகள் காதலித்தாள், இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என மறுக்கிறாள், அவள் ஒரு சாடிஸ்ட் எனப் புலம்பினார். ஏமாற்றப் பட்டோம் என்ற விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சேத்தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறைக்கு சென்று பார்த்தபோது சேத்தன் தூக்கில் தொங்கியபடி இருந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு தற்கொலை கடிதம் ஒன்று எழுதப்பட்டு இருந்தது, அது தனது தோழிக்கு 4.5 லட்சம் ரூபாயை  தான் இதுவரை செலவு செய்துள்ளதாகவும், அதனை சேகரித்து தனது குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் அதில் வேண்டுகோள் வைத்திருந்தார். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios