அவருக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து பெற்ற மகள் முன்பாகவே அவர் கள்ளக்காதலியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், மகளிடமும் அத்துமீறுல் தொடர்ந்தது. இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். 

கஞ்சா போதையில் மகள் கண்முன்னே கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரம் டோபி கானா தெருவை சேர்ந்தவர் குமரன் (37). மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவரது மனைவி செல்வி பேபி. இத்தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். செல்வி பேபி கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனை தொடர்ந்து அவரது 6 வயது மகள் வாலாஜா அடுத்த மேல குப்பத்தில் உள்ள அவரது தாத்தா பாதுகாப்பில் இருந்தார். குமரனும் அங்கேயே தங்கியிருந்தார்.

அப்போது, மருகனுக்கும், மாமனாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, தனது மகளுடன் குமரன் காட்டிபாடியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அடிக்கடி கஞ்சா போதையில் இருந்த குமரன் பெற்ற மகள் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனிடையே, அவருக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து பெற்ற மகள் முன்பாகவே அவர் கள்ளக்காதலியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், மகளிடமும் அத்துமீறுல் தொடர்ந்தது. இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். 

மனைவி உயிரிழந்த நிலையில் அடிக்கடி பெண் வந்து போவதை கவனித்தார். அவரது தந்தை இல்லாத நேரத்தில் மகளை அழைத்து விசாரித்தார். அப்போது, பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். சிறுமி எனது தந்தை வீட்டுக்கு பெண் ஒருவரை அழைத்து வருவார். இருவரும் துணி இல்லாமல் ஒன்றாக இருப்பார்கள். தந்தை என்னிடமும் தவறாக நடந்து கொள்வார் என்று கதறியபடி கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குமரனை போச்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.