Asianet News TamilAsianet News Tamil

பூங்காவில் வைத்து பள்ளி மாணவி பலாத்காரம்.. கர்ப்பமாக்கிய டிரைவர் எஸ்கேப்.. கதறிய பெற்றோர்.!

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. தங்கையை பார்க்க வருவது போல் பள்ளி மாணவியுடன் அடிக்கடி வந்து வெளியில் சுற்றி திரிந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணேஷ் ரகுநாத் மாணவியை ஆசை வார்த்தை கூறி ஆழியாறு பூங்காவுக்கு அழைத்து சென்றார். 

School student rape...Auto driver escape
Author
Dindigul, First Published Jan 2, 2022, 7:13 AM IST

ஆசை வார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை பூங்காவில் வைத்து பலாத்காரம் செய்து  கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சத்திரபட்டியை சேர்ந்தவர் கணேஷ் ரகுநாத் ( 23). ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது சகோதரி வீடு கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ளது. இதனால் கணேஷ்ரகுநாத் அடிக்கடி சகோதரி வீட்டுக்கு வந்து செல்வார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 16 வயதுடைய பிளஸ்-1 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். 

School student rape...Auto driver escape

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. தங்கையை பார்க்க வருவது போல் பள்ளி மாணவியுடன் அடிக்கடி வந்து வெளியில் சுற்றி திரிந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணேஷ் ரகுநாத் மாணவியை ஆசை வார்த்தை கூறி ஆழியாறு பூங்காவுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். 

இந்நிலையில், மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பயந்துபோன பெற்றோர் சிகிச்சைக்காக மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

School student rape...Auto driver escape

மாணவியிடம் கர்ப்பத்துக்கு யார்? காரணம் என பெற்றோர் விசாரித்தனர். அப்போது மாணவி கதறியபடி தன்னை ஆசை வார்த்தை கூறி கணேஷ் ரகுநாத் பலாத்காரம் செய்ததாக கூறினார். பின்னர் இது குறித்து மாணவியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கணேஷ்ரகுநாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios