Asianet News TamilAsianet News Tamil

பள்ளி மாணவி கூட்டு பலாத்காரத்தால் கர்ப்பம்.. 80 கிழவன் உட்பட 3 பேரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அந்த மாணவியிடம் விசாரித்த போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறியபடி கூறியுள்ளார்.

School student gang rape case...3 people arrested in posco
Author
Villupuram, First Published Jan 10, 2022, 12:36 PM IST

செஞ்சி அருகே 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அண்ணன், 80 கிழவன் உள்பட 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி தாய்-தந்தையை இழந்த நிலையில் தனது பெரியம்மா ஆதரவில் வளர்ந்து வருகிறார். இவர் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, உடனே  முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

School student gang rape case...3 people arrested in posco

அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அந்த மாணவியிடம் விசாரித்த போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறியபடி கூறியுள்ளார்.  இது தொடர்பாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாணவியின் பெரியம்மா மகன் மோகன் (32), அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (80), இளையராஜா (28) ஆகியோர் அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அடிக்கடி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த மாணவி கர்ப்பமானாது தெரியவந்தது. 

School student gang rape case...3 people arrested in posco

இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். கைதான 3 பேரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து மாணவியை மேலும் சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஆகைால், மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவியை 80 கிழவன் உள்பட 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios