Asianet News TamilAsianet News Tamil

உங்க பொண்ணு நாலு மாசம் கர்ப்பமா இருக்கா.. மருத்துவர் சொன்ன தகவலால் அதிர்ந்து போன பெற்றோர்..!

மயிலாடுதுறை மாவட்டம் அரசூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சபாபதி. இவரது மகன் சஞ்சய் (21).  இவர் அப்பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். 

School Student 4 months pregnant... youth Arrest under pocso act
Author
First Published Feb 8, 2023, 9:41 AM IST

மயிலாடுதுறை அருகே 10 -ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் அரசூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சபாபதி. இவரது மகன் சஞ்சய் (21).  இவர் அப்பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்து வந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பள்ளி மாணவியை அழைத்து வந்து அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். 

School Student 4 months pregnant... youth Arrest under pocso act

இந்நிலையில், அந்த பள்ளி மாணவிக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பதற்றம் அடந்த பெற்றோர் மகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி  4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த  பெற்றோர்  சிறுமியிடம் விசாரித்தனல்.  அப்போது, கதறியபடி நடந்தவற்றை கூறியுள்ளார். 

School Student 4 months pregnant... youth Arrest under pocso act

இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios