Asianet News TamilAsianet News Tamil

வீட்டில் குரூப் ஸ்டடி சொல்லிட்டு இரவில் லூட்டி.. பள்ளி மாணவிகள் விஐபிகளுக்கு சப்ளை? வெளியான பகீர் தகவல்.!

மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதுடன் மது விருந்தும் அளித்துள்ளார். உச்சகட்ட போதையில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் குரூப் ஸ்டடி என இரவு நேரங்களில் வீட்டில் சொல்லிவிட்டு வந்த மாணவிக்கு பலமுறை மது விருந்து அளித்து மன்ஸில் பாலியல் அத்துமீறலை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

School girls supply VIPs? shock information
Author
Sivaganga, First Published Nov 18, 2021, 7:38 PM IST

பள்ளி மாணவியை மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரத்தில் அழகு நிலைய பொறுப்பாளரை தேடி வரும் நிலையில் மேலும் பல மாணவிகளை மயக்கி முக்கிய விஐபிகளுக்கு சப்ளை செய்தனரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த பிளஸ் டூ மாணவி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சினிமா பாடலுக்கு ஏற்றவாறு நடித்து பதிவிட்டு வந்துள்ளார். இதனை சக மாணவிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார். அப்போது தனக்கு அறிமுகமான பிளஸ் டூ படிக்கும் சக மாணவியை தனது தாய் பணியாற்றும் அழகு நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அழகு நிலையப் பொறுப்பாளராக இருந்த மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சேர்ந்த மன்ஸிலுடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.

School girls supply VIPs? shock information

அவர் மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதுடன் மது விருந்தும் அளித்துள்ளார். உச்சகட்ட போதையில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் குரூப் ஸ்டடி என இரவு நேரங்களில் வீட்டில் சொல்லிவிட்டு வந்த மாணவிக்கு பலமுறை மது விருந்து அளித்து மன்ஸில் பாலியல் அத்துமீறலை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் பள்ளிகளுக்கு வந்த மாணவியை விக்னேஷ் என்பவர் மஸ்ஸின் அழைத்ததாக கூறி தியேட்டருக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் பள்ளிக்கு வருவதாக கூறிவிட்டு மாணவிகள் அழகு நிலையத்திற்கு சென்று மன்ஸிலுடன்  தனிமையில் இருந்துள்ளனர்.

School girls supply VIPs? shock information

மாணவிகள் தொடர்ந்து பல நாட்கள் விடுமுறை எடுத்தது குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்ததும் பெற்றோரை அழைத்து விசாரித்து மாணவிகளுக்கு டிசியை கொடுத்துள்ளனர். மேலும் மாணவிகளுடன் மிக நெருக்கமாக பழகி வந்த ஆசிரியை ஒருவரையும் பணி நீக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து கல்வித் துறை மற்றும் காவல்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல் அத்துமீறல்கள் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதில்,  அழகி நிலைய பொறுப்பாளர் மன்ஸில், பெண் பணியாளர், அவர் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மகள், விக்னேஷ், சிரஞ்சீவி என 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

School girls supply VIPs? shock information

 இதில் 4 பேர் கைதான நிலையில் தப்பியோடிய மன்ஸிலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கைதான 17 வயது மகளின் காதலர் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அவரை கைது செய்ய தனிப்படை விரைந்துள்ளது. பிணயாளரின் மகள் தன்னுடன் படிக்கும்10க்கும் மேற்பட்ட மாணவிகளை அழகு நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

School girls supply VIPs? shock information

இவர் இதற்கு முன்னர் படித்த பள்ளியில் பல மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி தவறான செயல்களில் ஈடுபட வற்புறுத்தியதாகவும், இத்தகவல் அறிந்து அவரை பள்ளி நிர்வாகம் டிசி கொடுத்து வெளியேற்றும் தெரியவந்துள்ளது. அந்த பள்ளியோடு தற்போது படித்த பள்ளியிலும் அதே வேலையை செய்து வந்துள்ளார். பிரச்சனைக்குள்ளான அழகு நிலையத்திற்கு  முக்கிய விஐபி அதிக அளவில் வந்து சென்றுள்ளனர். இவர்கள் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios