Asianet News TamilAsianet News Tamil

புழல் சிறையில் களி சாப்பிடப்போகும் சரவணபவன் உரிமையாளர்... 71 வயதில் ராஜகோபாலலுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

ருசியா சாப்பிடணும்னா எல்லோரும் சரவணபவன் ஹோட்டலுக்கு போவாங்க. ஆனால், சரவணபவன் உரிமையாளரான ராஜகோபால் நாக்குக்கு ருசியா சாப்பிடமுடியாது. 

Saravanabhavan is the owner of Puzhal Jail
Author
Tamil Nadu, First Published Jul 9, 2019, 6:24 PM IST

ருசியா சாப்பிடணும்னா எல்லோரும் சரவணபவன் ஹோட்டலுக்கு போவாங்க. ஆனால், சரவணபவன் உரிமையாளரான ராஜகோபால் நாக்குக்கு ருசியா சாப்பிடமுடியாது. காரணம் அவர் கொலைவழக்கில் ஆயுள்தண்டனை கைதியாகி இன்று முதல் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். Saravanabhavan is the owner of Puzhal Jail

சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் உடனே நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் உச்சநீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டது. வடபழனி பகுதியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் ஆம்புலன்சில் உயர்நீதிமன்றத்திற்கு செல்லப்பட்டார்.  Saravanabhavan is the owner of Puzhal Jail

ஜீவஜோதியின் கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் தான் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதால் தற்போது சரண் அடைய இயலாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ராஜகோபால் உடல் நிலையை காரணம் காட்டி சரணடைய விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சரவணபவன் ராஜகோபால் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அவரால் சிறையில் இருக்க முடியாதா? ஒரு நாள் கூட வெளியில் இருக்க அவகாசம் கொடுக்க முடியாது என உத்தரவிட்டனர். இந்நிலையில் ஆம்புலன்ஸில் ராஜகோபால் பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். Saravanabhavan is the owner of Puzhal Jail

ஸ்ட்ரெக்சர் மூலம் கொண்டு செல்லப்பட்ட அவர், மூன்றாவது மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதிமுன் ஆஜரானார். அவரது உடநிலையை காரணம் காட்டி சரணடைவதில் இருந்து விலக்குக் கேட்கப்பட்டது. ஆனால், அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று முதல் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios