கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு சுவாரஸ்யமான கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அந்த வரிசையில், இந்த சம்பவமும் இணைந்து இருக்கிறது.

நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் பிரபல ஆடையகம் ஒன்றில் திருட சென்ற கொள்ளையன், அங்கு பணம் கிடைக்காத விரக்தியில் ஆண் பொம்மையின் ஆடைகளை கழற்றி அதனுடன் சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படியுங்கள்: "அவள எனக்கு விட்டுறு"... 41 வயது ஆன்ட்டி-காக கணவன் முகத்தில் ஆசிட் அடித்த 27 வயது கள்ளக் காதலன்..

கன்னியாகமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த செட்டிக்குளம் என்ற பகுதியில் ஆண்கள் ஆடையகம் செயல்பட்டு வருகிறது. குளச்சர் பகுதியை சேர்ந்த ஜோசப் பவின் இந்த கடையை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் இரவு கடையை பூட்டி சென்ற நிலையில், காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை ஜோசப் பவன் பார்த்து அதிர்ந்து போனார். 

இதையும் படியுங்கள்: நீ பாலியல் தொழில் பண்றியாடி.?? கல்லூரி மாணவிக்கு நள்ளிரவில் போன் போட்டு போலீஸ்காரர் செய்த அசிங்கம்..

இதைத் தொடர்ந்து ஜோசப் பவன் கோட்டார் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். விசாரணையின் போது, ஆண்கள் ஆடையகத்தின் பின்பக்க கதவை உடைத்த கொள்ளையன் கடைக்குள் சென்று பணம் உள்ளதா என பார்த்து இருக்கிறான். பணம் எதுவும் கிடைக்காத விரக்தியில் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான துணிகளை கொள்ளையடித்து இருக்கிறான். 

இதையும் படியுங்கள்: அத்தைமீது ஏற்பட்ட விபரீத ஆசை.. வாடகைக்கு வீடு எடுத்து இஷ்டத்துக்கு உல்லாசம் ... தனி அறையில் நடந்த கொடூரம்.

பின்னர் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அங்கு விளம்பரத்திற்காக வைக்கப்பட்டு இருந்த ஆண் உருவ பொம்மையின் ஆடைகளை கழற்றிய கொள்ளையன் அதனுடன் சுய இன்பத்தில் ஈடுபட்டான் என்பது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து கோட்டார் காவல் நிலைய அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

முன்னதாக பல்வேறு கொள்ளை சம்பவங்களின் போது கொள்ளை அடித்த வீட்டில் குறட்டை விட்டு தூங்கியது, சமையல் செய்து நிதானமாக இருந்து சாப்பிட்டு முடிந்து அதன் பின் கொள்ளை அடுத்து சென்றது என பல்வேறு சுவாரஸ்ய கொள்ளை பின்னணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று இருக்கிறது.