சிறுமியை லிதின் பலாத்காரம் செய்வதை வீடியோ எடுக்க இருவரும் திட்டமிட்டனர். மீண்டும் லிதின் சிறுமியை அழைத்து வந்து பலாத்காரம் செய்தபோது மறைத்து வைத்து போனில் படம் பிடித்துள்ளனர். பின்னர், அந்த மாணவியிடம், தங்களிடம் பலாத்கார வீடியோ காட்சி இருக்கிறது. எனவே நாங்கள் சொல்வதுபோல் செய்ய வேண்டும் என்று கூறி, நிர்வாணமாக நிற்குமாறு கூறி மிரட்டியுள்ளனர்.

கொச்சியில் ஆசை வார்த்தை கூறி 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீசார் போச்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கேரள மாநிலம் கொச்சி வடுதலா பகுதியை சேர்ந்தவர் பிபின் (25). இவரது மனைவி வர்ஷா (19). பிபின் அந்த பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் ஊழியராக லிதின் (19) என்பவர் வேலை செய்து வருகிறார். பிபினின் குடியிருக்கும் வீட்டு மாடியில் ஒரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 12 வயதில் மகள் ஒருவர் இருந்தார். அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். 

பிபின் வீட்டுக்கு அடிக்கடி லிதின் வருவது வழக்கம். அப்போது மாடி வீட்டில் வசிக்கும் சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரதத்தில் லிதின் சிறுமியை அழைத்து ஆசைவார்த்தை கூறி அடிக்கடி பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த விவகாரம் பிபின் மற்றும் வர்ஷாவுக்கு தெரியவந்தது. 



இதனையடுத்து, சிறுமியை லிதின் பலாத்காரம் செய்வதை வீடியோ எடுக்க இருவரும் திட்டமிட்டனர். மீண்டும் லிதின் சிறுமியை அழைத்து வந்து பலாத்காரம் செய்தபோது மறைத்து வைத்து போனில் படம் பிடித்துள்ளனர். பின்னர், அந்த மாணவியிடம், தங்களிடம் பலாத்கார வீடியோ காட்சி இருக்கிறது. எனவே நாங்கள் சொல்வதுபோல் செய்ய வேண்டும் என்று கூறி, நிர்வாணமாக நிற்குமாறு கூறி மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து பிபின், அவரது மனைவி வர்ஷா மற்றும் லிதின் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிபினும், வர்ஷாவும் சிறுமியின் நிர்வாண படத்தை எடுத்து ஆபாச இணைய தளத்துக்கு அனுப்ப தீர்மானித்தது தெரியவந்தது.