உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார் சிங். இவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் மீது இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 50 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் போலீஸ்காரர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார் சிங். இவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் மீது இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில் பிரயாக்ராஜ் பகுதியில் தான் வசித்து வந்த போது காவல்துறையில் பணியாற்றி வரும் சுனில்குமார் சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- என் புருஷன் உயிரோடு இருக்கும் வரைக்கும் நம்ம ஒன்னு சேர முடியாது.. கணவரை கூலிப்படையை ஏவி போட்டு தள்ளிய மனைவி.!

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் இருவரும் சுற்றியுள்ளனர். பின்னர், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்தார். சுமார் 50 முறை பலாத்காரம் செய்ததாகவும், திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது, சுனில்குமார் சிங் மறுத்ததுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸ்காரர் சுனில்குமார் சிங் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை போலீஸ்காரரே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;- பீச்சில் உட்கார்ந்து கொண்டு காதலியிடம் ரொமன்ஸ்! திடீரென வந்த 3 பேர்! போலீசில் கதறிய காதலன்! நடந்தது என்ன?