கள்ளக்காதலியின் மகள் மீது தீராத ஆசை.. குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்த காமக்கொடூரன்.!
குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்ததால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்ததால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே சேங்கதோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன்(32). திருமணமாகாதவர் சோப்பு கம்பெனி ஏஜென்சியில் கடைகளுக்கு சப்ளை செய்யும் வியாபாரியாக உள்ளார். இவருக்கு கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி சில ஆண்டுகளிலேயே அவரது கணவர் வீட்டை விட்டு ஓடி விட்டார்.
இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். மகள் மற்றும் தனது தந்தையுடன் அந்தப் பெண் தனியாக வசித்து வந்தார். அப்போது அவரது வீட்டு வழியே சென்று வந்த சோப்பு வியபாரி கணேசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்த நிலையில், அவர்களுக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது இருவரும் நெருங்கிப் பழகினர். இதனால், கணேசன் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி பகல், இரவு நேரங்களில் சென்று வந்தார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் கணேசனுக்கு அந்தப் பெண்ணின் 11 வயது மகள் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளக்காதலி வீட்டில் இல்லாத நேரத்திலும் கணேசன் அவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில், சம்பத்தன்று கள்ளக்காதலி அவரது தந்தை வெளியில் சென்றதை தெரிந்துகொண்ட கணேசன் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, தனியாக இருந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். பின்னர் தான் வாங்கி வந்த குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து சிறுமிக்கு கொடுத்துள்ளார்.
இதை வாங்கி குடித்த சிறுமி சிறிது நேரத்தில் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளார். அப்போது காமக்கொடூரன் கணேசன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தூக்கம் கலைந்து கண்விழித்த சிறுமி தனது அலங்கோல நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கணேசனை போலீசார் கைது செய்துள்ளனர்.