Asianet News TamilAsianet News Tamil

கணவன் கண்முன்னே மனைவியை கதற கதற கற்பழித்து வீடியோ எடுத்த கும்பல்!! அடுத்த 2 நாட்களில் அந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி...

கணவன் கண் மனைவியை பெண்ணை 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியுள்ளனர். 

Rampur incident not gangrape: UP cops deny victim's account
Author
Uttar Pradesh, First Published Jun 19, 2019, 2:58 PM IST

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கணவன் மனைவி  பைக்கில் கடைக்குச் சென்று, திரும்பி வந்துகொண்டிருந்தபோது  வண்டியில் இருந்து இருவரையும் தள்ளி விட்டது ஒரு கும்பல். அப்போது கணவன் கண் முன்னேயே அந்த பெண்ணை 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியான அந்த கணவன் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

உத்திரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 11ஆம் தேதி இரவு கணவனும் மனைவியும் இரு சக்கர வாகனத்தில் அருகில் இருந்த கடைக்கு சென்றனர். அவர்களை வழிமறித்த நான்கு பேர் தகராறு செய்தனர். அதையும் மீறி அவர்கள் வண்டியை எடுத்த போது அந்த கும்பல் வண்டியோடு பிடித்து இருவரையும் தள்ளியது. இதில் கணவன் மனைவி இருவரும் நிலை தடுமாறி விழுந்தனர். இருவரையும் அந்த கும்பல் இழுத்துக்கொண்டு சென்றது. கணவனை மரத்தில் கட்டி வைத்தது. கணவன் கண் முன்னாலேயே அந்த பெண்ணை நான்கு பேரும் பலாத்காரம் செய்தனர். 

Rampur incident not gangrape: UP cops deny victim's account

அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் வரவே, அங்கிருந்த கும்பல் தப்பி ஓடியது. இதனையடுத்து கதறி அழுத்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு அந்த விசயத்தை அவர்கள் மறந்து விட்டனர். இரு தினங்களுக்கு முன்பு அந்த தம்பதியினருக்கு இணையத்திலும், வாட்ஸ் அப் பேஸ்புக்கிலும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பாலியல் பலாத்காரம் செய்த கும்பல பலதஹ்கரம் செய்த சமயத்தில் எடுத்த வீடியோவை அதை இணையத்திலும் வெளியிட்டுள்ளனர். 

இந்த வீடியோ வைரலாக பரவியது. இதனால் மனவுளைச்சலில் இருந்த அந்த பாதிக்கப்பட்ட அந்த தம்பதியினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் உடலளவில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios