சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் மரணம்..! ஆயுள் தண்டனை கைதிக்கு சோகம்..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்.
ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவர் உரிமையாளர் ஆயுள் தண்டனை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உடல் நிலை சரியிலாததால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து நேற்று சென்னை வடபழனி விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலை அங்கு கடந்த சிலதினங்களாக மோசமாக இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு தற்போது 72 வயதாகிறது.