ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து தமிழகத்துக்கு 4 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருப்பதி - வேலூர் நெடுஞ்சாலையில் ஆந்திர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
செம்மரக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான திமுக ஒன்றியக்குழு பெருந்தலைவரின் கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து தமிழகத்துக்கு 4 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருப்பதி - வேலூர் நெடுஞ்சாலையில் ஆந்திர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூர் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஒரு மினி லாரி மற்றும் 3 கார்கள் நிற்காமல் சென்றன.

அவற்றை சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்தனர். இதில், 15க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய போளூரை சேர்ந்த பெருமாள் மற்றும் ஆரணியை சேர்ந்த வேலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களில் இருந்த சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடியவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், செம்மரக்கட்டைகளுடன் 4 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பெருமாளின் மனைவி திமுக ஒன்றியக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பித்தக்கது.
